சிப் அபகஸ் புத்தளம் கிளையைச் சேர்ந்த மாணவர்கள் 52 விருதுகளைத் தம் வசப்படுத்திக் கொண்டனர்.

Date:

-எம்.யூ.எம்.சனூன்

கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் அண்மையில் (14) நடைபெற்ற அகில இலங்கை சிப் அபகஸ் தேசிய ப்ராடிஜி போட்டியில் சிப் அபகஸ் புத்தளம் கிளையைச் சேர்ந்த மாணவர்கள் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தி, 52 விருதுகளைத் தம் வசப்படுத்திக் கொண்டனர்.

இந்த சிப் அபகஸ் தேசிய ப்ராடிஜி போட்டியில் இலங்கை முழுவதிலிருந்தும் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றிருந்தனர்.

இந்த நிகழ்வை நாடாளுமன்ற துணை சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி சாலிஹ் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்வில் புத்தளம் கிளையின் நிர்வாக இயக்குனர் செயித் அப்கர் தலைமையிலான சிப் அபகஸ் மாணவர்கள் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தி இந்த அடைவை பெற்றுள்ளனர்.

புத்தளம் கிளை மாணவர்களின் சாதனைகளுக்கான அங்கீகாரத்தை, துணை சபாநாயகரும் குழுக்களின் தலைவருமான டாக்டர் ரிஸ்வி சாலிஹ் அவர்கள், சிப் அபகஸ் புத்தளம் கிளை நிர்வாக இயக்குனர் சையத் அப்கர் முகமது மில்ஹான் அவர்களுக்கு வழங்கி வைத்தார்.

இந்த அங்கீகாரமானது போட்டியில் பங்கேற்ற மாணவர்களின் அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் சிறப்பை எடுத்துக்காட்டியமை குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.

Popular

More like this
Related

போதைப்பொருள் மற்றும் ஆயுத சுற்றிவளைப்புகள் 2025இல் அதிகரிப்பு!

2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025ஆம் ஆண்டில் பெருமளவிலான போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களைக்...

லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு!

நேற்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல்...

பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் இடியுடன் மழை

இன்றையதினம் (07) நாட்டின் ஊவா மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா, அம்பாறை, மட்டக்களப்பு...

‘தொழில்நுட்ப ஜாம்பவான்கள் குறைக்கட்டும்’: சமூக வலைதளத் தடையை எதிர்க்கும் எலான் மஸ்க்கிற்கு ஸ்பெயின் பிரதமர் பதிலடி.

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் ஸ்பெயின்...