சீரற்ற வானிலை காரணமாக மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (19) முதல் மூடப்படும்.
மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன் மற்றும் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு இடையில் இன்று (18) காலை இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, டிசம்பர் 22 ஆம் திகதியும் பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும். நத்தார் பண்டிகை விடுமுறையைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி டிசம்பர் 29 ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் ஆரம்பமாகும் என மத்திய மாகாண கல்விச் செயலாளர் மதுபானி பியசேன தெரிவித்துள்ளார்.
