அதிபரை விழா மேடையில் விமர்சித்த மாணவி:அறிக்கை கோரியுள்ள கல்வியமைச்சு

Date:

தற்போது சமூக ஊடகங்களில் பேசும்பொருளாக மாறியுள்ள கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரி மாணவியின் உரை தொடர்பில் கல்வியமைச்சு குறித்த பாடசாலை அதிபரிடம் அறிக்கையொன்றை கோரியுள்ளது.

கல்லூரியில் அண்மையில் இடம்பெற்ற வண்ண விருது விழாவில் மாணவி விமர்சனத்திற்குரிய கருத்துக்களை வெளியிட்டிருந்தார். இந்த விடயம் சமூக ஊடகங்களில் பரவலானதையடுத்து, இது தொடர்பில் கல்வியமைச்சு விசேட அவதானம் செலுத்தியது.

கல்லூரி அதிபர் தலைமையிலான நிர்வாகத்தின் விருது வழங்கல் தீர்மானங்களால் தான் அநீதிக்கு உள்ளானதாக மாணவி கருத்து வெளியிட்டார்.

இந்நிலையில் கல்வியமைச்சு கோரியுள்ள அறிக்கையை பாடசாலை அதிபர் வழங்கியதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் நாலக கலுவௌ தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

அமைதிப்பேச்சு: பாகிஸ்தான் சென்றார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்: பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு.

ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள பாகிஸ்தான் வந்த அமெரிக்க துணை...

வாகனங்களுக்கான எரிபொருள் QR முறைமை நீக்கம்?

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, இன்று (11) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி...

ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வு பெறும் ஆரம்பப்பிரிவு ஆசிரிய ஆலோசகர் மௌபியா அவர்களுக்கு கஹட்டோவிட்டவில் கௌரவிப்பு!

கம்பஹா மற்றும் மினுவாங்கொட கல்வி வலயங்களில் நீண்டகாலமாக ஆரம்பப்பிரிவு ஆசிரிய ஆலோசகராகப்...

தமிழ்- சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு!

நாட்டின் பொதுமக்களின் மிக முக்கியமான பாரம்பரிய விழாவான சித்திரை புத்தாண்டு காலத்தில்...