கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

Date:

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில் உலக அரபு மொழி தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

அரபு மொழி என்பது வெறும் ஒரு மொழி மட்டுமல்ல; அது வளமான நாகரிகத்திற்கான பாலமாகவும், ஆழமான கவிதைகளின் வெளிப்பாடாகவும், புரட்சிகரமான அறிவியல் சிந்தனைகளின் அடித்தளமாகவும், காலத்தால் அழியாத ஞானத்தின் பாத்திரமாகவிளங்குகிறது.

உலகம் முழுவதும் 400 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் பேசப்படும் இந்த மொழி, மனிதகுலத்தின் கலாசார பன்முகத்தன்மையை நிலைநாட்டும் முக்கியத் தூணாக உள்ளது.

இந்த ஆண்டிற்கான யுனெஸ்கோவின் கருப்பொருளாக “அரபு மொழி மற்றும் செயற்கை நுண்ணறிவு” தெரிவு செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்பம் மற்றும் தகவல்தொடர்பு துறைகளின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் அரபு மொழி வகிக்கும் முக்கிய பங்கினை இது எடுத்துக்காட்டுகிறது.

பாயும் அழகிய கையெழுத்து முதல், மெல்லிசை நிறைந்த பேச்சுவழக்குகள் வரை, அரபு மொழி கண்டங்கள் கடந்தும் மக்களை ஊக்குவித்து, ஒன்றிணைக்கும் ஒரு சக்தியாக தொடர்ந்து விளங்குகிறது.

Popular

More like this
Related

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...

சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைப்பு!

சிலாபம் மாவட்ட பொதுத் தள வைத்தியசாலையின் பாவனைக்காக அண்ட்ராய்ட்  இரத்த அழுத்தக்...

“இஸ்ரேலுக்கு இருக்கும் ஒரே பலத்த கூட்டாளி டிரம்ப் மட்டுமே”: டிரம்ப் – ஈரான் ஒப்பந்தத்தை விமர்சிக்க வேண்டாம் என ஜே.டி. வான்ஸ் எச்சரிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானுடன் மேற்கொண்டுள்ள சமாதான ஒப்பந்தத்தைப் பகிரங்கமாக...