பேரிடரினால் பாதிக்கப்பட்ட 85% மின் இணைப்புகள் மீட்பு!

Date:

அவசரகால பேரிடர் சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட சுமார் 3.9 மில்லியன் மின்சார நுகர்வோரில், சுமார் 85% மின் இணைப்புகள் இப்போது மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் (CEB) பிரதிப் பொது முகாமையாளர் நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார்.

நேற்று (04) பேரிடர் மேலாண்மை மையத்தில் நடைபெற்ற சிறப்பு விளக்கக் கூட்டத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நாடு முழுவதும் கிட்டத்தட்ட 7 மில்லியன் மின்சார நுகர்வோர் இருப்பதாகவும், அவர்களில் 3.9 மில்லியன் பேருக்கான மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

தற்போதைய நிலவரப்படி, இந்த நுகர்வோரில் சுமார் 85% பேருக்கு மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.

 

அவசரகால பேரிடர் சூழ்நிலையில், 16,771 மின்மாற்றிகள் செயலிழந்தன, அவற்றில் 14,549 மின்மாற்றிகள் ஏற்கனவே சரிசெய்யப்பட்டு மீட்டெடுக்கப்பட்டுள்ளன.

 

மீதமுள்ள மின் மாற்றிகள் விரைவில் சரிசெய்யப்பட்டு, மின் விநியோகம் வழங்கப்படும்.

Popular

More like this
Related

இடைநிறுத்தப்பட்டுள்ள அரசாங்கத்தின் புதிய கல்வி சீர்திருத்தத்தை அமுல்படுத்துமாறு போராட்டம்!

2027ஆம் ஆண்டு வரை இடைநிறுத்தப்பட்டுள்ள அரசாங்கத்தின் புதிய கல்வி சீர்திருத்ததை உடனடியாக...

கடந்த 8 ஆண்டுகளில் முதல்முறையாக சீனா சென்ற கனடா பிரதமர்!

சீன ஜனாதிபதி ஷி ஜிங்பிங்கை கனடா பிரதமர் மார்க் கார்னி இன்று...

ஜனாதிபதி தலைமையில் வடமாகாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட தேசிய வீட்டு வசதி திட்டம்

தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளின் கீழ்,...

இலங்கையில் 13% கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நீரிழிவு!

கர்ப்பகாலத்தில் 13 சதவீதத்திற்கும் அதிகமான தாய்மார்களுக்கு நீரிழிவு நோய் (Diabetes) ஏற்பட்டுள்ளதாக...