GovPay ஊடாக நன்கொடை வழங்கும் வசதி!

Date:

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, GovPay ஊடாக நன்கொடைகளைச் செலுத்தக்கூடிய ஒரு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நிதி அமைச்சினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அனர்த்த நிவாரண நிதியத்திற்கு நன்கொடைகளை வழங்குவதற்கு இலகுவானதும் வெளிப்படைத்தன்மை கொண்டதுமான இந்த முறைமை தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அரச கொடுப்பனவுக்கான பிரதானமாக விளங்கும் GovPay ஊடாக, எவர் வேண்டுமானாலும், எந்த நேரத்திலும், உடனடியாக நன்கொடைகளைச் செலுத்த முடியும்.

இதில், நன்கொடைப் பணம் உடனடியாக நிதிக்கு வரவு வைக்கப்படுவதுடன், வீட்டில் இருந்தோ அல்லது எங்கிருந்தோ இலகுவாக நன்கொடை வழங்கக்கூடியதாகவும், அத்துடன் அந்த செயல்முறை முழுமையாக வெளிப்படைத்தன்மையுடன் (Transparency) காணப்படுவதும் இதன் சிறப்பம்சமாகும் என டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது.

GovPay உடன் இணைக்கப்பட்டுள்ள இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகள் (Commercial Banks) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட FinTech செயலிகள் (Apps) பலவற்றின் மூலம் இந்த அனர்த்த நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்க முடியும்.

நன்கொடைகளைச் செலுத்தக்கூடிய வங்கிகள் மற்றும் FinTech செயலிகளின் பட்டியலை அறிந்துகொள்ள https://govpay.lk/si/supported-banks-fintech என்ற இணைப்பிற்குச் செல்ல முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

மன்னார், இலுப்பைக்கடவை மற்றும் செட்டிகுளம் பகுதிகளில் பாதிக்கப்பட்ட 157 பேரை கடற்படையினர் மீட்டனர்

மன்னாரின் இலுப்பைக்கடவை மற்றும் செட்டிகுளம் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட...

வென்னப்புவவில் உயிரிழந்த விமானி தொடர்பில் இலங்கை விமானப்படை இரங்கல்

வென்னப்புவ, லுணுவில பிரதேசத்தில் ஹெலிகொப்டரை அவசரமாகத் தரையிறக்கப்பட்ட முற்பட்ட போது உயிரிழந்த...

சீரற்ற வானிலையால் சந்தையில் மரக்கறிகளின் விலை உயர்வு!

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் மொத்த விலை கணிசமாக அதிகரித்துள்ளன. ஒரு...

தோற்றுப் போன அனர்த்த நிவாரணம்:வெள்ளத்தில் சிக்கி உயிர் தப்பியவரின் உருக்கமான பதிவு

நாட்டில் சிலவிய மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிர்...