அனர்த்த நிவாரணத்துக்கு பங்களிப்பு செய்த கொழும்பு பெரிய பள்ளிவாசல்!

Date:

தித்வா புயல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் சுமார் 1.5 மில்லியன் ரூபா நிதியும் ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான ஒரு தொகுதி உலர் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள்  கொழும்பு பெரிய பள்ளிவாசலில் வைத்து கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதியமைச்சர் முனீர் முழப்பர் கலந்து கொண்டார்.

கொழும்பு பெரிய பள்ளிவாசல் தலைவர் தாஹிர் ரஸீன் தலைமையிலான நம்பிக்கையாளர் சபையினர் பிரதியமைச்சருடன் இணைந்து இவற்றை பெற்றா பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவர் அஷ்ஷெய்க் மெளலவி L M லமீர் ஹாபிஸ் உள்ளிட்ட சம்மேளன அங்கத்தவர்களும் வழங்கி வைத்தனர்.

இந்நிவாரனப் பொருட்கள் குறிப்பாக அனர்த்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட வெல்லம்பிட்டி, கொலன்னாவ மக்களுக்கு பெற்றா பள்ளிவாசல்கள் சம்மேளனம் ஊடாக வழங்கப்படவுள்ளது.

தலைமையுரையை கொழும்பு பெரிய பள்ளிவாசல் தலைவர் தாஹிர் ரஸீன் நிகழ்த்தியதுடன் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதி பணிப்பாளர் அலா அஹமட், சமய மற்றும் கலாசார விவகாரங்களுக்கான பிரதியமைச்சர் முனீர் முழப்பர் ஆகியோர் உரையாற்றினர்.

இந்நிகழ்வில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள், உலமாக்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள ஏனைய அதிகாரிகள், முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

பாகிஸ்தானிலிருந்து மேலும் ஒருதொகை நிவாரணம் இலங்கைக்கு கையளிப்பு!

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக பாகிஸ்தான் அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட மனிதாபிமான...

தஃவா அமைப்புக்களை பரஸ்பரம் புரிந்துகொள்ள வைப்பதில் பங்காற்றிவரும் அனர்த்த நிவாரணப்பணிகள்

அண்மையில் ஏற்பட்ட டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட கம்பளை மற்றும் கெலிஓயா...

அவுஸ்திரேலியாவின் துப்பாக்கிச் சூடு குறித்து ஜனாதிபதி அனுர இரங்கல்!

அவுஸ்திரேலியாவின் சிட்னி, பொண்டி கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 16...

ஹமாஸின் மூத்த தளபதி ரேத் சயீத் காசாவில் படுகொலை!

காசாவில் ஹமாஸின் மூத்த தளபதி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள்...