டிசம்பர் மாதத்தின் முதல் 8 நாட்களில் 50,000 ஐத் தாண்டிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

Date:

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்தின் மத்தியிலும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, 2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து டிசம்பர்  மாதம் 08 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 21 இலட்சத்து 53 ஆயிரத்து 815 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 485,249 ஆகும்.

மேலும், ஜெர்மனியிலிருந்து 136,081 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 164,013 சுற்றுலாப் பயணிகளும்,  ஐக்கிய இராச்சியத்திலிருந்து 195,565 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 97,261 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 124,298 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 103,307 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்

அத்துடன், டிசம்பர் மாதத்தின் முதல் எட்டு நாட்களில் 50,222 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

புதுப்பிக்கப்பட்ட Google Map A மற்றும் B வீதி வரைபடங்கள் !

வீதி அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து Google Map A மற்றும்...

தரம் 6 மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்ப காலம் நீடிப்பு!

இலங்கையில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, தரம் 6 இல்...

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு குவைத் தலைவர்கள் இரங்கல்.

குவைத் நாட்டின் தலைவர்கள் டிட்வா புயல்தாக்கத்தினால் துயரத்தில் வாடும் இலங்கை மக்களுக்கு...

இலங்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர நிவாரண திட்டத்தை ஆரம்பித்து வைக்கிறது கத்தார் செரிட்டி.

அபிவிருத்திக்கான கத்தார் நிதியத்தின் நிதிப் பங்களிப்புடன் இலங்கைக்கான கத்தார் அரசின் தூதரகத்துடன்...