ஜனாதிபதி தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டம்.

Date:

நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் ஆராயும் விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்று இன்று (02) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நடைபெறவுள்ளது.

இன்று) மாலை 5.00 மணிக்கு இந்த அவசர அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் எஸ். கே. ஜே. பண்டார தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ள இந்த விசேட அமைச்சரவைக் கூட்டத்திற்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக நாட்டின் தற்போதைய சூழ்நிலை, நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் தொடர்பில் இங்கு விரிவாக ஆராயப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

Popular

More like this
Related

ஹஜ் பெருநாள் எதிரொலி: மேற்கு வங்க பாரதிய ஜனதா கட்சி அரசின் புதிய கால்நடை கட்டுப்பாடுகளால் இந்து வியாபாரிகள் கடும் கடன் சுமை!

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி...

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு பிணையில் செல்ல அனுமதி

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். தலங்கம பொலிசாரினால் இன்று...

ஹஜ் பெருநாளை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு, போக்குவரத்து ஏற்பாடுகள்

எதிர்வரும் மே மாதம் 28ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள ஹஜ் பெருநாளை முன்னிட்டு...

40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் இலவச விசா !

குறுகிய காலத்திற்கு இலங்கைக்கு வருகை தரும் 40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா...