தரம் 6 மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்ப காலம் நீடிப்பு!

Date:

இலங்கையில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, தரம் 6 இல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணையவழி மூலம் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

2025- தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையின் மீள் பரிசீலனைப் பெறுபேறுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

பெறுபேறுகள் மாற்றமடைந்த மாணவர்களிடமிருந்து விண்ணப்பப் படிவங்களைப் பெற்று அதிபர்கள், அவற்றை இணையவழி முறைமையினுள் உள்ளீடு செய்யும் பணிகள் 2025.11.26 ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்பட்டது.

2025.12.05 ஆம் திகதியன்று இணையவழி மூலமாக விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்க வேண்டிய இறுதித் திகதி என்றாலும், தற்போதுள்ள அனர்த்த நிலைமை காரணமாக குறித்த இறுதித் திகதி 2025.12.12 ஆம் திகதியாக திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் 2025 ஆம் ஆண்டில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பாடசாலைகளுக்கு 2026 ஆம் ஆண்டில் தரம் 6 இற்கு அனுமதிப்பதற்கான முதலாவது மேன்முறையீடுகளை சமர்ப்பிக்கும் செயற்பாடுகள் தற்போதளவில் ஆரம்பிக்கப்படவில்லை.

அது தொடர்பில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல்கள் பொய்யானவை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

2025 ஆம் ஆண்டு தரம் 06 இற்கு முதல் சுற்றில் பாடசாலைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பாடசாலைகளுக்கு அனுமதித்த பின்னர் நிலவுகின்ற வெற்றிடங்களுக்காக இணையவழி முறைமையூடாக மேன்முறையீட்டு விண்ணப்பப் படிவங்கள் கோரப்படும் – என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

புதுப்பிக்கப்பட்ட Google Map A மற்றும் B வீதி வரைபடங்கள் !

வீதி அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து Google Map A மற்றும்...

டிசம்பர் மாதத்தின் முதல் 8 நாட்களில் 50,000 ஐத் தாண்டிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்தின் மத்தியிலும் சுற்றுலாப்...

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு குவைத் தலைவர்கள் இரங்கல்.

குவைத் நாட்டின் தலைவர்கள் டிட்வா புயல்தாக்கத்தினால் துயரத்தில் வாடும் இலங்கை மக்களுக்கு...

இலங்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர நிவாரண திட்டத்தை ஆரம்பித்து வைக்கிறது கத்தார் செரிட்டி.

அபிவிருத்திக்கான கத்தார் நிதியத்தின் நிதிப் பங்களிப்புடன் இலங்கைக்கான கத்தார் அரசின் தூதரகத்துடன்...