இஸ்ரேலிலுள்ள இலங்கையர்களுக்கு அறிவித்தல்

Date:

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் அனைவரும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண பாதுகாப்புச் சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, மிகுந்த அவதானத்துடன்செயற்படுமாறு இஸ்ரேலிலுள்ள இலங்கைத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் எந்தவொரு வளர்ந்து வரும் அச்சுறுத்தலையும் கட்டுப்படுத்தத் தயாராக இருப்பதாகவும், இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு தொடர்ந்தும் தகவல் மற்றும் ஆலோசனைகளைப் புதுப்பிக்கும் என்றும் இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார, சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏவுகணைத் தாக்குதல்கள் போன்ற அவசர நிலைகள் ஏற்பட்டால், அது குறித்த தகவல்கள் உடனுக்குடன் உங்களது ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி அனுப்பி வைக்கப்படும் எனவும், அபாய எச்சரிக்கை சத்தம் கேட்டால், உடனடியாக அருகிலுள்ள பாதுகாப்பு அறைகளுக்குச் சென்று தஞ்சம் அடையுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு,இன்று சனிக்கிழமை (31) காலை 10 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை தூதரகம் திறந்திருக்கும் என்றும், இந்த நேரத்தில் வழக்கமான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

 

Popular

More like this
Related

ஹஜ் பெருநாள் எதிரொலி: மேற்கு வங்க பாரதிய ஜனதா கட்சி அரசின் புதிய கால்நடை கட்டுப்பாடுகளால் இந்து வியாபாரிகள் கடும் கடன் சுமை!

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி...

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு பிணையில் செல்ல அனுமதி

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். தலங்கம பொலிசாரினால் இன்று...

ஹஜ் பெருநாளை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு, போக்குவரத்து ஏற்பாடுகள்

எதிர்வரும் மே மாதம் 28ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள ஹஜ் பெருநாளை முன்னிட்டு...

40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் இலவச விசா !

குறுகிய காலத்திற்கு இலங்கைக்கு வருகை தரும் 40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா...