இஸ்ரேலிலுள்ள இலங்கையர்களுக்கு அறிவித்தல்

Date:

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் அனைவரும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண பாதுகாப்புச் சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, மிகுந்த அவதானத்துடன்செயற்படுமாறு இஸ்ரேலிலுள்ள இலங்கைத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் எந்தவொரு வளர்ந்து வரும் அச்சுறுத்தலையும் கட்டுப்படுத்தத் தயாராக இருப்பதாகவும், இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு தொடர்ந்தும் தகவல் மற்றும் ஆலோசனைகளைப் புதுப்பிக்கும் என்றும் இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார, சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏவுகணைத் தாக்குதல்கள் போன்ற அவசர நிலைகள் ஏற்பட்டால், அது குறித்த தகவல்கள் உடனுக்குடன் உங்களது ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி அனுப்பி வைக்கப்படும் எனவும், அபாய எச்சரிக்கை சத்தம் கேட்டால், உடனடியாக அருகிலுள்ள பாதுகாப்பு அறைகளுக்குச் சென்று தஞ்சம் அடையுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு,இன்று சனிக்கிழமை (31) காலை 10 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை தூதரகம் திறந்திருக்கும் என்றும், இந்த நேரத்தில் வழக்கமான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

 

Popular

More like this
Related

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...

புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று...

அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச் சீட்டுக்கள் வழங்காத பஸ்களை முறையிட 1955 தொலைபேசி இலக்கம்

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச்...