இஸ்ரேல் வேலைவாய்ப்பு மோசடி குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் அறிவுறுத்தல்!

Date:

சமூக ஊடகங்கள்  வாயிலாக இஸ்ரேல் வேலைவாய்ப்பு குறித்து பரப்பப்படும் போலியான தகவல்கள் மற்றும் வேலை பெற்றுத்தருவதாகக் கூறி பணம் பறிக்கும் மோசடி கும்பல்கள் குறித்து இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு (SLBFE) நாளாந்தம் புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.

இது குறித்து பணியகம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்கள்,

உங்கள் கடவுச்சீட்டு அல்லது பணத்தை ஏதேனும் ஒரு நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு முன்னர், அந்த நிறுவனம் சட்டபூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

முகநூல் மற்றும் ஏனைய சமூக ஊடகங்களில் வரும் விளம்பரங்களை முழுமையாக நம்பி ஏமாற வேண்டாம்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான சந்தேகங்கள் அல்லது தகவல்களைப் பெற்றுக்கொள்ள பணியகத்தின் 1989 என்ற உடனடி அழைப்பு இலக்கத்தைத் தொடர்பு கொள்ளவும்.

Popular

More like this
Related

நேற்று காலமான பேராசிரியர் அப்துல் மலிக் அவர்களின் ஜனாஸா இஸ்லாமாபாத்தில் நல்லடக்கம்.

இலங்கை மருதமுனையை பிறப்பிடமாகக் கொண்ட ஜாமியா நளீமியாவின் பட்டதாரியும், பாகிஸ்தான் சர்வதேச...

போர் நிறுத்தம்: அமெரிக்காவிடம் புதிய முன்மொழிவை வழங்கிய ஈரான்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில் ஈரான்...

வில்பத்து வழக்கு: ரிஷாத் பதியூதீனின் மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!

வில்பத்து சரணாலயத்திற்கு அருகிலுள்ள வனப் பகுதிகளை அழித்தது மற்றும் அதைத் தொடர்ந்த...

‘அமைதிக்கான நடைபயணம்’: நாளை கொழும்பில் சிறப்பு போக்குவரத்து திட்டம்

நாளை (28) கொழும்பில் நடைபெறவுள்ள ‘சமாதான நடைபவனி’ (Walk for Peace)...