‘தேசத்திற்கான முஸ்லிம்களின் பங்களிப்பு’ குறித்த சிங்கள மொழியிலான ஆய்வு நூல் வெளியீட்டு விழா இன்று.

Date:

கலாநிதி ரவூப் ஸெய்ன் தமிழில் தயாரித்து வழங்கிய ‘இலங்கை முஸ்லிம்களின் தேசிய பங்களிப்பு’ என்ற நூலின் சிங்கள மொழிபெயர்ப்பு ‘අභිමානවත් ඉතිහාසයක ලාංකේය මුස්ලිම් ලකුණ’ என்ற பெயரில் கலாநிதி தம்மிக ஜயசிங்க அவர்களால் மேற்கொள்ளப்பட்டு அதன் வெளியீட்டு விழா  இன்று 28ஆம் திகதி புதன்கிழமை மாலை 4.00 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

சிறப்பு வாய்ந்த இவ்விழாவின் பிரதம அதிதியாக புத்தசாசன மற்றும் மத விவகார கலாசார அமைச்சர் கலாநிதி சுனில் செனவி கலந்துகொள்வதோடு பேராதனைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் கலாநிதி ரோஹித திசாநாயக விஷேட உரை நிகழ்த்தவுள்ளார்.

அத்துடன் ஜனநாயக சீர்திருத்தத்திற்கான அமைப்பின் பணிப்பாளர் திரு மஞ்சுல கஜநாயக விழாவை ஏற்பாடு செய்யும் பஹன மீடியாவின் 7 ஆண்டு நிறைவு குறித்த உரையை நிகழ்த்தவுள்ளார்.

பிரதி அமைச்சர்களான கமகெதர திசாநாயக்க, முனீர் முழப்பர், அர்க்கம் இல்யாஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், சர்வமதத் தலைவர்கள், நிறுவனத் தலைவர்கள் மற்றும் புத்திஜீவிகள் பலரும் இவ்விழாவில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Popular

More like this
Related

சவூதி வாழ் இலங்கையர்களுக்கு இலங்கை தூதரகம் அவசர எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் அசாதாரண பாதுகாப்பு சூழ்நிலையை...

இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை : வெளிவிவகார அமைச்சு தகவல்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அனைத்து இலங்கை இராஜதந்திர தூதரகங்களுடனும் நெருங்கிய...

சவூதி, பஹ்ரைன், கத்தார், UAE மீதும் ஈரான் தாக்குதல்.. அமெரிக்காவால் வெடிக்கும் 3ம் உலகப்போர்?

ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் சேர்ந்து ஆக்ரோஷமாக தாக்கி வருகின்றன. இதையடுத்து...

மத்தியக் கிழக்கில் போர் பதற்றம்: ஸ்ரீலங்கன் விமான சேவையில் தாமதம்

இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள்...