தொடரும் ‘Newsnow’இன் மனிதாபிமானப் பணிகள்: தெல்தோட்டை மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கி வைப்பு

Date:

கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் டிட்வா புயல், முழு நாட்டையும் உலுக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்திய நிலையில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வீடுகளை இழந்து பலர் இன்னும் அடிப்படை வசதிகளுக்காக போராடி வருகிறார்கள்.

இக்கடுமையான நிலைமைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பக்கபலமாக இருந்து உதவி செய்வதை ‘நியூஸ் நவ்’ ஊடகம் தனது பங்களிப்பாக முன்னெடுத்து வருகிறது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகளை அறிந்து பஹன மீடியா ஊடக நிறுவனத்தின் அனுசரணையுடன் கடந்த வெள்ளிக்கிழமை 15 ஆம் திகதி தெல்தோட்டை – வெடக்கேபொத்த பகுதியை சேர்ந்த 100 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் மற்றும் குர்பானி இறைச்சிகள் வழங்கி வைக்கப்பட்டப்பட்டன.

இந்த நிவாரண பணியை பஹன மீடியா, வெடக்கேபொத்த அபிவிருத்தி மன்றம் மற்றும் நியூஸ் நவ் ஊடகம் என்பன இணைந்து ஒருங்கிணைத்தன.

Popular

More like this
Related

அஸ்வெசும நிதி நாளை மறுதினம் வங்கிக் கணக்குகளுக்கு!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்திற்கான நிதி நாளை மறுதினம் (19) பயனாளி குடும்பங்களின்...

வங்கிக் கணக்குகளை குறிவைத்து புதிய மோசடி; மக்களை எச்சரிக்கும் SLCERT!

இணையம் மற்றும் தொலைபேசி ஊடாக இடம்பெறும் பல்வேறு மோசடி நடவடிக்கைகள் குறித்து...

பட்டம் விடுவதால் ஏற்படும் அனர்த்தங்கள்: பிள்ளைகளின் பாதுகாப்பில் கூடுதல் அக்கறை அவசியம்!

பாடசாலை விடுமுறையிலுள்ள மாணவர்களின் பாதுகாப்பு குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டுமென...

நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை!

வறட்சியான வானிலை நிலவியபோதிலும், நாடளாவிய ரீதியில் தற்போது தடையற்ற நீர் விநியோகம்...