நாடளாவிய ரீதியில் 3 நாள் டெங்கு ஒழிப்பு திட்டம்.

Date:

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தலைமையில் உள்ளூராட்சி நிறுவனங்களால் சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மற்றும் இலங்கை பொலிஸ், சூழல் பாதுகாப்புப் பிரிவு, கல்வி, பாதுகாப்பு மற்றும் சுற்றாடல் அமைச்சுக்களின் கூட்டு பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் “நிகசல புபுரயக் – சுவபர திவியக்” அனர்த்தத்திற்கு பின்னரான தூய்மைப்படுத்தல் மற்றும் டெங்கு கட்டுப்பாட்டு மூன்று நாள் தேசிய திட்டம், இன்று (07) முதல் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை, நாடு முழுவதும் 03 நாட்களுக்கு செயல்படுத்தப்படும்.

மழைக்காலம் காரணமாக டெங்கு பரவும் அபாயம் இருப்பதால், இந்த விசேட தேசிய திட்டம் இந்த வாரம் புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நாடு முழுவதையும் உள்ளடக்கியதாக செயல்படுத்தப்படும்.

அதன்படி, இந்த திட்டம் பின்வருமாறு செயல்படுத்தப்படும்.

• 2026/01/07 – சமூக அளவிலான டெங்கு கட்டுப்பாட்டு திட்டம்

• 2026/01/08 – கல்வித் துறையை உள்ளடக்கிய நிறுவனங்களுக்கான டெங்கு கட்டுப்பாட்டு திட்டம்

• 2026/01/09 – அரச மற்றும் தனியார் துறைகளை உள்ளடக்கிய டெங்கு கட்டுப்பாட்டு திட்டம்

Popular

More like this
Related

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையும் அதிகரிப்பு

லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் நேற்று (11) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்...

இன்று கிடைக்கப்பெறும் அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டப் பயனாளிகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு...

நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில்

இன்றையதினம் (12) நாட்டின் ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும்...

2026ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 18,000 எலிக்காய்ச்சல் சம்பவங்கள் பதிவு

நாட்டில் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 13,000 எலிக்காய்ச்சல்...