உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய சாரா ஜாஸ்மின் இறந்திருக்க வாய்ப்பில்லை: பொது பாதுகாப்பு அமைச்சர்

Date:

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய சாரா ஜாஸ்மின் என்று அழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரன் இறந்துவிடவில்லை என்பதை விசாரணைகளின் போது கண்டறியப்பட்ட சில தகவல்கள் சுட்டிக்காட்டுவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

இது தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், சாரா ஜாஸ்மின் தற்போது இந்தியாவில் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்றும் தெரிவித்தார்.

 

தேவைப்பட்டால், சாரா ஜாஸ்மினுக்கு எதிராக பிடியாணை பெறுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். தாக்குதல்களுக்குப் பின்னால் சதி இருக்கிறதா என்று புதிய அரசாங்கம் விசாரித்து வருகின்றது.

 

இது தொடர்பான சில விவரங்களை நாடாளுமன்றத்தில் வெளியிட முடியாது, ஏனெனில் அவ்வாறு செய்வது நடந்து கொண்டிருக்கும் விசாரணைகளுக்கு இடையூறாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு சில நாட்களுக்குப் பின்னர் சாய்ந்தமருதில் நடந்த தற்கொலை குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் கருதப்படும் சாரா ஜாஸ்மின் குறித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் ஆனந்த விஜேபால இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.

Popular

More like this
Related

நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்று மாநாடு:புதிய தலைமுறையைப் பாதுகாக்கவும் கட்டியெழுப்பவும் நபிகளாரின் வழிகாட்டல் அவசியம் என வலியுறுத்தல்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில்...

5 நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக பிரதமர் பூட்டான் பயணம்!

ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயமாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று...

நாட்டின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் மழை மற்றும் பலத்த காற்று...

தேசிய மீலாத் கண்காட்சியில் பெரியமுல்லை அஹதியா மாணவர்களின் மகத்தான பணி!

நடந்து முடிந்த 42வது தேசிய மீலாத் விழா பல்வேறு சிறப்பம்சங்களோடு மிகக்...