பாடசாலை மாணவருக்கும் ஆசிரியர்களுக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பு; கல்வி அமைச்சின் உத்தரவு!

Date:

கொழும்பில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவருக்கும் மூன்று பெண் ஆசிரியர்களுக்கும் இடையிலான நெருங்கிய உறவு மற்றும் சமூக ஊடகங்களில் பரவி வரும் அது தொடர்பான காணொளிகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவா பாடசாலையின் அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் தற்போது பரப்பப்படும் காணொளிகளை கல்வி அமைச்சு கவனத்தில் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பாடசாலை அதிபரின் அறிக்கையின் அடிப்படையில் விசாரணைகள் முடிந்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் கூறினார்.

அறிக்கை கிடைக்கும் வரை, சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் உட்பட எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றும் அவர் எடுத்துரைத்தார்.

தற்போது, ​குறித்த மாணவர், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஒரு மாணவரின் பெற்றோர் சம்பந்தப்பட்ட பல காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

புத்தாண்டு என்பது பண்டிகை மட்டுமல்ல, எமது கலாசார விழுமியங்களில் பொதிந்துள்ள சுபீட்சம், ஒற்றுமை, சகவாழ்வு: பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!

சூரியன் மீன இராசியிலிருந்து மேஷ இராசிக்குச் சங்கமிப்பதையும், அறுவடைப் பணிகள் நிறைவடைந்து...

கூட்டுச் செயல்பாடுகள் மூலம் வெளிப்படும் சமூக-கலாசார பிணைப்புடன் இந்த புத்தாண்டு அமைய நல்வாழ்த்துகள்: ஜனாதிபதியின் புத்தாண்டு செய்தி

பௌதீக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் மாற்றம் பெறுவதை அடையாளப்படுத்தும் சிங்கள மற்றும்...

அமைதிப்பேச்சு: பாகிஸ்தான் சென்றார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்: பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு.

ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள பாகிஸ்தான் வந்த அமெரிக்க துணை...

வாகனங்களுக்கான எரிபொருள் QR முறைமை நீக்கம்?

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, இன்று (11) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி...