சொஹாரா புஹாரியின் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் பதவி இரத்து!

Date:

கொழும்பு மாநகர சபை உறுப்பினரான சொஹாரா புஹாரி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) கட்சி உறுப்பினர் பதவி உடனடியாக இரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச்செயலாளர் எம். நிசாம் காரியப்பர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கொழும்பு மாநகர சபையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு–செலவுத் திட்டத்துக்கு, எதிர்க்கட்சியாக உள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெளிவாக எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்திருந்த நிலையில், அதனை மீறி ஸோஹரா புஹாரி அந்த வரவு–செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தமை, கட்சியின் ஒழுக்க விதிகளுக்கு முரணானதாகும்.

இதனையடுத்து, கடந்த 2025 டிசம்பர் 31ஆம் திகதி, கட்சி ஒழுக்கத்தை கடுமையாக மீறியதாகக் குறிப்பிட்டு, அவரின் கட்சி உறுப்பினர் பதவி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதுடன் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஒரு வாரத்திற்குள் சத்தியகடதாசி வாக்குமூலமாக விளக்கம் அளிக்குமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் எவ்வித விளக்கமும் அல்லது சத்தியக்கடதாசியும் சமர்ப்பிக்கப்படாததன் காரணமாக, குற்றச்சாட்டுகளை அவர் மறைமுகமாக ஏற்றுக்கொண்டதாகக் கருதி, கட்சி ஒழுக்க நடைமுறைகளின்படி, அவரின் கட்சி உறுப்பினர் பதவியை முழுமையாக இரத்து செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம், கட்சி தலைவர் ரவூப் ஹக்கீமின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்டதுடன் இது இறுதியானதும் மாற்றமற்றதுமான தீர்மானமாகும் எனவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

அடுத்த 24 மணி நேரத்திற்கான வானிலை முன்னறிவிப்பு

இந்தியப் பெருங்கடலில் உருவாகியுள்ள டெல்டா அழுத்த தாழ்வு மண்டலம்வேகமாக நெருங்கி வருவதாக...

ஜனவரி 01 முதல் பிரிட்டனுக்கான இலங்கை ஆடை ஏற்றுமதிக்கு வரிச் சலுகை

பிரித்தானியாவின் வளர்ச்சியடைந்து வரும் நாடுகளுக்கான வர்த்தகத் திட்டத்தின் (DCTS) கீழ், இலங்கையின்...

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் 3 இலட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழப்பு

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6 இலட்சம் பெண்கள் கர்ப்பப்பை வாய்...

அனுராதபுரம் மற்றும் குருநாகலில் புதிய வீடமைப்புத் திட்டம் ஆரம்பம்: ஜனாதிபதி பங்கேற்பு!

‘தித்வா’ சூறாவளியினால் முழுமையாக சேதமடைந்த வீட்டிற்கு பதிலாக, ‘Rebuilding Sri Lanka’...