தொடரும் ‘Newsnow’இன் மனிதாபிமானப் பணிகள்: தெல்தோட்டை மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கி வைப்பு

Date:

கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் டிட்வா புயல், முழு நாட்டையும் உலுக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்திய நிலையில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வீடுகளை இழந்து பலர் இன்னும் அடிப்படை வசதிகளுக்காக போராடி வருகிறார்கள்.

இக்கடுமையான நிலைமைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பக்கபலமாக இருந்து உதவி செய்வதை ‘நியூஸ் நவ்’ ஊடகம் தனது பங்களிப்பாக முன்னெடுத்து வருகிறது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகளை அறிந்து பஹன மீடியா ஊடக நிறுவனத்தின் அனுசரணையுடன் கடந்த வெள்ளிக்கிழமை 15 ஆம் திகதி தெல்தோட்டை – வெடக்கேபொத்த பகுதியை சேர்ந்த 100 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் மற்றும் குர்பானி இறைச்சிகள் வழங்கி வைக்கப்பட்டப்பட்டன.

இந்த நிவாரண பணியை பஹன மீடியா, வெடக்கேபொத்த அபிவிருத்தி மன்றம் மற்றும் நியூஸ் நவ் ஊடகம் என்பன இணைந்து ஒருங்கிணைத்தன.

Popular

More like this
Related

நேற்று காலமான பேராசிரியர் அப்துல் மலிக் அவர்களின் ஜனாஸா இஸ்லாமாபாத்தில் நல்லடக்கம்.

இலங்கை மருதமுனையை பிறப்பிடமாகக் கொண்ட ஜாமியா நளீமியாவின் பட்டதாரியும், பாகிஸ்தான் சர்வதேச...

போர் நிறுத்தம்: அமெரிக்காவிடம் புதிய முன்மொழிவை வழங்கிய ஈரான்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில் ஈரான்...

வில்பத்து வழக்கு: ரிஷாத் பதியூதீனின் மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!

வில்பத்து சரணாலயத்திற்கு அருகிலுள்ள வனப் பகுதிகளை அழித்தது மற்றும் அதைத் தொடர்ந்த...

‘அமைதிக்கான நடைபயணம்’: நாளை கொழும்பில் சிறப்பு போக்குவரத்து திட்டம்

நாளை (28) கொழும்பில் நடைபெறவுள்ள ‘சமாதான நடைபவனி’ (Walk for Peace)...