நூல் அறிமுக விழாவும் இலவச கத்னா வைபவமும்

Date:

கஹட்டோவிட்டவில் அமைந்துள்ள Muslim Ladies Study Circle ஏற்பாடு செய்துள்ள நூல் வெளியீட்டு விழாவும் இலவச கத்னா வைபவமும் எதிர்வரும் 14 ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ளது.

காலையில் கத்னா வைபவமும் அதேதினம் மாலை 4 மணிக்கு நூல் வெளியீட்டு விழாவும் நடைபெறவுள்ளது.

மௌலவியா கமரூன்நிஷா எழுதிய ‘தெவிட்டாத தேன் துளிகள்’ என்ற நூல் இவ்வைபவத்தின் போது வெளியிடப்படவுள்ளது.

முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி அல்ஹாஜ் எம்.எம். மக்கி இவ்வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்துகொள்வதோடு முன்னாள் தேர்தல் ஆணையாளர் எம்.எம். முஹம்மத் அவர்கள் நூலாய்வு செய்வார்.

Muslim Ladies Study Circle தலைவரும் சிரேஷ்ட ஒலிபரப்பாளர் அல்ஹாஜ் எம்.இஷட் அஹமட் முனவ்வர் அவர்களின் தலைமையில் நடைபெறும்.

இச்சிறப்பு நிகழ்ச்சியில் கம்பஹா மாவட்ட அஹதியாவின் தலைவர் அஷஷெய்க் அக்ரம் ஜுனைத் சிறைப்புரையாற்றுவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் 3 இலட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழப்பு

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6 இலட்சம் பெண்கள் கர்ப்பப்பை வாய்...

அனுராதபுரம் மற்றும் குருநாகலில் புதிய வீடமைப்புத் திட்டம் ஆரம்பம்: ஜனாதிபதி பங்கேற்பு!

‘தித்வா’ சூறாவளியினால் முழுமையாக சேதமடைந்த வீட்டிற்கு பதிலாக, ‘Rebuilding Sri Lanka’...

மேலும் வலுவடையும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவாகியுள்ள தாழமுக்கம் தொடர்பில் வளிமண்டலவியல்...

வலுவடையும் தாழமுக்கம்: பல பகுதிகளில் மழை

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...