காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டதாக, ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
காசாவில் , இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையில் கடந்த 2025 அக்டோபர் 10 ஆம் தேதி போர்நிறுத்தம் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து, வீடுகளை விட்டு வெளியேறிய பலஸ்தீன மக்கள் தங்களது வசிப்பிடங்களுக்குத் திரும்பி வந்தனர்.
