அனர்த்தங்களினால் முழுமையாக வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு காணிகளை நன்கொடையாக வழங்க சந்தர்ப்பம்

Date:

திட்வா புயல் தாக்கத்துடன் ஏற்ப்பட்ட அனர்த்த நிலைமைகள் காரணமாக பெருமளவானோர் வீடு மற்றும் காணிகளை இழந்தனர்.

பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் அரசினால் Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இதற்கமைய அனர்த்தங்களினால் முழுமையாக வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

வீடுகளை நிர்மாணிப்பதற்கு தேவையான காணியை நன்கொடையாக வழங்குவதற்கு மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

www.rebuildingsrilanka.gov.lk என்ற இணையத்தளத்தில் அல்லது 1800 என்ற இலக்கத்திற்கு அழைப்பதன் ஊடாக மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

காணிகளை நன்கொடையாக வழங்குபவர்களின் விபரங்களை 0112 331 246 என்ற பெக்ஸ் இலக்கத்திற்கு அனுப்ப முடியும். அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட எந்தவொரு நபரையும் கைவிடாது அவர்கள் வாழ்வியல் இருந்ததைவிடவும் சிறப்பான மட்டத்தில் அமைய வேண்டுமென்பதே அரசின் எதிர்பார்ப்பாகும்.

குறித்த சகோதரத்துவ மக்களுக்காக Rebuilding Sri Lanka வேலைத்திட்டத்துடன் கைகோர்க்குமாறு நாடு முழுவதிலுள்ள பரந்த மனப்பான்மைக் கொண்ட மக்களுக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

77 ஆவது குடியரசு தினத்தை கொண்டாடும் இந்தியா!

இந்தியா இன்று (26) தனது 77 ஆவது குடியரசு தினத்தைக் கொண்டாடுகிறது. அரசியலமைப்பை...

நாட்டின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (25) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல்,  ஊவா மாகாணங்களிலும்...

கத்தாரில் உயிரிழந்த இலங்கையர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு

கத்தார் இராச்சியத்தில் பணியிலிருந்த போது உயிரிழந்த இலங்கையர்களான இழப்பீட்டை அங்குள்ள இலங்கை...

இவ்வருடத்தின் கடந்த 22 நாட்களில் இவ்வருடத்தின் கடந்த 22 நாட்களில்

இவ்வருடத்தின் கடந்த 22 நாட்களில் மாத்திரம் 194,553 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு...