சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

Date:

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தங்கியிருந்த சீன வெளிநாட்டு அமைச்சர் வாங் யீ (Wang Yi) அவர்களை, இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் சந்தித்து வரவேற்றார்.

இந்தச் சந்திப்பு குறித்து கருத்து வெளியிட்ட அமைச்சர் விஜித ஹேரத், ‘டிட்வா’ (Ditwah) சூறாவளியைத் தொடர்ந்து இலங்கைக்கு சீனா வழங்கிய தாராளமான உதவிகளுக்காக சீன அரசாங்கத்திற்கும் அந்நாட்டு மக்களுக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டார்.

சூறாவளியால் பாதிக்கப்பட்டதாகக் கண்டறியப்பட்ட வீதிகள், புகையிரத பாதைகள் மற்றும் பாலங்களை புனரமைப்பது உள்ளிட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்திகளுக்கு சீன அரசாங்கத்தின் உதவியை அமைச்சர் இதன்போது விசேடமாகக் கோரியுள்ளார்.

இந்தக் கோரிக்கை தொடர்பாக தனது தனிப்பட்ட தலையீட்டை வழங்குவதாக உறுதியளித்த அமைச்சர் வாங் யீ, இலங்கை விரைவான மீட்சியை நோக்கிச் சரியான பாதையில் பயணிப்பதாகத் தனது நம்பிக்கையை வெளியிட்டதுடன், சீன அரசாங்கத்தின் முழுமையான ஆதரவையும் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

அமைச்சர் வாங் யீ உள்ளிட்ட 17 பேர் கொண்ட தூதுக்குழுவினர், தென்னாப்பிரிக்காவின் டர்பன் (Durban) நகரிலிருந்து திரும்பும் வழியிலேயே இலங்கையில் இந்தச் சிறு இடைத்தங்கல் விஜயத்தை மேற்கொண்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...

Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும்...