பெப்ரவரி 04 முதல் 11 வரை புத்த பெருமானின் புனித சின்னங்கள் தரிசனம்.

Date:

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலையீட்டின் கீழ் இந்திய அரசாங்கத்தின் முழு அனுசரணையுடன் இலங்கைக்குக் கொண்டுவரப்படவுள்ள “ புத்த பெருமானின் புனித சின்னங்கள்” தரிசனம் பெப்ரவரி 04 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை ஏழு நாட்கள் கொழும்பு, ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையில்  நடைபெறும்.

அதன், ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (21) முற்பகல் ஜனாதிபதி அலுலகத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த இடமான குஜராத்தில் 1960களில் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட புத்த பெருமானின் உடல் சார்ந்த புனித சின்னங்கள் இதுவரை இந்தியாவுக்கு வெளியே கொண்டு செல்லப்படவில்லை என்பதுடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அண்மைய இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் விளைவாக, இந்த புனித சின்னங்களை தரிசிக்கும் அரிய வாய்ப்பு இந்த நாட்டு மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.

 

புனித சின்னங்களை பெப்ரவரி 04 ஆம் திகதி கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதுடன், அன்றிலிருந்து, ஹுனுபிட்டி கங்காராம விஹாரையில் பொது மக்களுக்கு புனித சின்னங்களை வழிபடும் வாய்ப்புக் கிடைக்கும்.

 

பெப்ரவரி 04 ஆம் திகதி இந்தியாவிலிருந்து புனித சின்னங்கள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டதிலிருந்து அவை இந்தியாவுக்கு மீண்டும் கொண்டு செல்லப்படும் வரை தேவையான வசதிகள், ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒதுக்கப்பட்ட பணிகள் மற்றும் அவை தொடர்பான திட்டங்கள் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டன.

புனித சின்னங்களை வழிபடுவதற்காக ஏராளமான பொதுமக்கள் கொழும்புக்கு வருகை தருவதால் அவர்களுக்குத்  தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும் என்று இங்கு கருத்துத் தெரிவித்த கங்காராம விகாரையின் விகாராதிபதி வண. கிரிந்தே அஸ்ஸஜி நாயக்க தேரர் தெரிவித்தார்.

புனித சின்னங்களை வழிபடுவதற்காக கங்காராம விகாரை வளாகம் எவ்வாறு தயார்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்தும் தேரர் இதன்போது கருத்துத் தெரிவித்தார்.

இது, இலங்கை மக்களுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சந்தர்ப்பம் என்றும், நாட்டில் பௌத்த மறுமலர்ச்சியை உருவாக்கும் திட்டத்தில் ஒரு தனித்துவமான வாய்ப்பு என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால இதன்போது தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

கல்வி மறுசீரமைப்புகளின்போது பல்கலைக்கழக நிபுணர்களைக் கொண்ட பொறிமுறை நிறுவப்படும்: ஜனாதிபதி

கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதில் எழுந்துள்ள பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், நிபுணர்கள்...

இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட புதிய அரசியல் கட்சிகளின் பட்டியல் வெளியீடு

இலங்கை தேர்தல் ஆணையம் 1981 ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க பாராளுமன்றத்...

வருடத்தின் முதல் 19 நாட்களில் பதிவான விபத்துக்களில் 120 பேர் உயிரிழப்பு!

2026 ஜனவரி 01 தொடக்கம் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில்...

பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்

அரசாங்கப் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டத்திற்காக இன்று (ஜனவரி 21)...