அனர்த்தங்களினால் முழுமையாக வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு காணிகளை நன்கொடையாக வழங்க சந்தர்ப்பம்

Date:

திட்வா புயல் தாக்கத்துடன் ஏற்ப்பட்ட அனர்த்த நிலைமைகள் காரணமாக பெருமளவானோர் வீடு மற்றும் காணிகளை இழந்தனர்.

பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் அரசினால் Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இதற்கமைய அனர்த்தங்களினால் முழுமையாக வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

வீடுகளை நிர்மாணிப்பதற்கு தேவையான காணியை நன்கொடையாக வழங்குவதற்கு மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

www.rebuildingsrilanka.gov.lk என்ற இணையத்தளத்தில் அல்லது 1800 என்ற இலக்கத்திற்கு அழைப்பதன் ஊடாக மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

காணிகளை நன்கொடையாக வழங்குபவர்களின் விபரங்களை 0112 331 246 என்ற பெக்ஸ் இலக்கத்திற்கு அனுப்ப முடியும். அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட எந்தவொரு நபரையும் கைவிடாது அவர்கள் வாழ்வியல் இருந்ததைவிடவும் சிறப்பான மட்டத்தில் அமைய வேண்டுமென்பதே அரசின் எதிர்பார்ப்பாகும்.

குறித்த சகோதரத்துவ மக்களுக்காக Rebuilding Sri Lanka வேலைத்திட்டத்துடன் கைகோர்க்குமாறு நாடு முழுவதிலுள்ள பரந்த மனப்பான்மைக் கொண்ட மக்களுக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

Popular

More like this
Related

நேற்று காலமான பேராசிரியர் அப்துல் மலிக் அவர்களின் ஜனாஸா இஸ்லாமாபாத்தில் நல்லடக்கம்.

இலங்கை மருதமுனையை பிறப்பிடமாகக் கொண்ட ஜாமியா நளீமியாவின் பட்டதாரியும், பாகிஸ்தான் சர்வதேச...

போர் நிறுத்தம்: அமெரிக்காவிடம் புதிய முன்மொழிவை வழங்கிய ஈரான்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில் ஈரான்...

வில்பத்து வழக்கு: ரிஷாத் பதியூதீனின் மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!

வில்பத்து சரணாலயத்திற்கு அருகிலுள்ள வனப் பகுதிகளை அழித்தது மற்றும் அதைத் தொடர்ந்த...

‘அமைதிக்கான நடைபயணம்’: நாளை கொழும்பில் சிறப்பு போக்குவரத்து திட்டம்

நாளை (28) கொழும்பில் நடைபெறவுள்ள ‘சமாதான நடைபவனி’ (Walk for Peace)...