அரசாங்க அச்சுத் திணைக்களத்தில் தமிழ் மொழிபெயர்ப்பாளர் தட்டுப்பாடு: தமிழ், முஸ்லிம் விண்ணப்பதாரர்கள் பாதிப்பு!

Date:

அரசாங்க அச்சுத் திணைக்களத்தில் தமிழ் மொழிபெயர்ப்பாளர்களின் பற்றாக்குறை நிலவுவதால், நாளாந்தம் வெளியிடப்படும் வர்த்தமானி அறிவித்தல்களைத் தமிழ் மொழியில் பெற்றுக்கொள்வதில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக, அண்மையில் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நேற்று முன்தினம் வரை தமிழ் மொழியில் வெளியாகவில்லை என விண்ணப்பிக்கத் தயாராக உள்ள தமிழ் பேசும் பட்டதாரிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இந்த மொழிபெயர்ப்புத் தாமதம் காரணமாகத் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் சரியான நேரத்தில் தகவல்களைப் பெற முடியாமல் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

இது குறித்து அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் தலைவர் ஷாம் நவாஸ், ஊடகத்துறை அமைச்சருக்கு எழுத்துமூலம் புகார் அளித்துள்ளார்.

இந்த மொழிப் பிரச்சினையைத் தீர்க்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Popular

More like this
Related

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையும் அதிகரிப்பு

லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் நேற்று (11) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்...

இன்று கிடைக்கப்பெறும் அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டப் பயனாளிகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு...

நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில்

இன்றையதினம் (12) நாட்டின் ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும்...

2026ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 18,000 எலிக்காய்ச்சல் சம்பவங்கள் பதிவு

நாட்டில் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 13,000 எலிக்காய்ச்சல்...