பெண்களுக்கு இரவு நேர வேலை : வர்த்தமானி அறிவித்தல்!

Date:

பெண்கள், இரவு நேரங்களில் துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் சிற்றுண்டி விநியோகஸ்தர்களாக (Waitresses) பணியாற்றுவதற்கு அனுமதி வழங்கி புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

 தொழிலாளர் அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ அவர்களினால், ‘கடைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் சட்டத்தில்’ மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் ஊடாக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை நடைமுறையிலிருந்த சட்டத்தின்படி, 18 வயதிற்கு மேற்பட்ட பெண்களை மாலை 6.00 மணிக்குப் பின்னர் கழிப்பறை துப்புரவுப் பணியாளர்களாகச் சேவையில் ஈடுபடுத்த முடியாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

புதிய திருத்தத்தின்படி, 18 வயதிற்கு மேற்பட்ட பெண்களை துப்புரவுப் பணியாளர்களாகவோ அல்லது சிற்றுண்டி விநியோகஸ்தர்களாகவோ மாலை 6.00 மணி முதல் மறுநாள் காலை 6.00 மணி வரை பணியில் ஈடுபடுத்த முடியும்.

இரவு நேரத்தில் பணியாற்றும் பெண்களுக்கு பின்வரும் வசதிகளை வழங்குவது முதலாளிகளின் பொறுப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது:

பொருத்தமான தங்குமிட வசதி, போக்குவரத்து வசதிகள், சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் நலன்புரி வசதிகள்.

இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் பெண்கள் 51% ஆக இருந்தபோதிலும், தொழிலாளர் சந்தையில் அவர்களின் பங்களிப்பு 34% ஆக மட்டுமே உள்ளது.

வேகமாக வளர்ந்து வரும் சுற்றுலாத் துறைக்குத் தேவையான மனித வளத்தை வழங்குவதற்கும், பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கும் இருக்கும் சட்டத் தடைகளைத் தளர்த்துவது காலத்தின் தேவை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

புத்தாண்டு என்பது பண்டிகை மட்டுமல்ல, எமது கலாசார விழுமியங்களில் பொதிந்துள்ள சுபீட்சம், ஒற்றுமை, சகவாழ்வு: பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!

சூரியன் மீன இராசியிலிருந்து மேஷ இராசிக்குச் சங்கமிப்பதையும், அறுவடைப் பணிகள் நிறைவடைந்து...

கூட்டுச் செயல்பாடுகள் மூலம் வெளிப்படும் சமூக-கலாசார பிணைப்புடன் இந்த புத்தாண்டு அமைய நல்வாழ்த்துகள்: ஜனாதிபதியின் புத்தாண்டு செய்தி

பௌதீக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் மாற்றம் பெறுவதை அடையாளப்படுத்தும் சிங்கள மற்றும்...

அமைதிப்பேச்சு: பாகிஸ்தான் சென்றார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்: பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு.

ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள பாகிஸ்தான் வந்த அமெரிக்க துணை...

வாகனங்களுக்கான எரிபொருள் QR முறைமை நீக்கம்?

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, இன்று (11) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி...