இராணுவம் மற்றும் பொலிஸார் மீது நன்மதிப்பு: டிட்வா நிவாரணம் குறித்தான மக்களின் கருத்துக்கணிப்பு

Date:

சமூக விஞ்ஞானிகளின் சங்கத்தினால் (SSA) கடந்த டிட்வா புயலின் பின்னர் இடம்பெற்ற நிவாரணப் பணிகள் தொடர்பில் ஆய்வொன்று நடத்தப்பட்டுள்ளது. மக்களின் கருத்துக்கணிப்பு இதற்கென பெறப்பட்டது.

இதற்கமைய அரசு குறித்த அனர்த்த நிலைமைகளை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகளை 74.4 வீதமானோர் வரவேற்றுள்ளனர். நிவாரண திட்டங்களில் ஜனாதிபதியின் தலையீடு குறித்தான கருத்துக்கணிப்பில் 78.7 வீதமான மக்களின் வரவேற்பு கிடைக்கப்பெற்றுள்ளது.

இதேவேளை முப்படையினர் மற்றும் பொலிசாரின் நிவாரணப் பணிகள் விடயத்தில் இராணுவத்தினருக்கு 91.2 வீதமானோரும் பொலிசாருக்கு 84.6 வீதமானோரும் தமது வரவேற்பை வழங்கியுள்ளனர்.

அரசியல்வாதிகளின் செயற்பாடுகளுடன் ஒப்பிடுகையில் ஆளும்கட்சி அரசியல்வாதிகளின் பணிகளுக்கு 45.8 வீதமானோர் தமது பாராட்டை வழங்கியுள்ளனர். எதிர்க்கட்சியின் செயற்பாடுகளுக்கு 23.7 வீதமானோரே தமது வரவேற்பை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

எரிவாயுவிற்கு தட்டுப்பாடு இல்லை – லிட்ரோ

வீட்டுப் பாவனை எரிவாயு சிலிண்டருக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லையென லிட்ரோ நிறுவனம்...

இம்ரான் கானுக்கு ஆதரவாக இலங்கை நாடாளுமன்றில் தீர்மானம்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தடுப்புக்காவல் தொடர்பாக மனிதாபிமான அடிப்படையில்...

நம்பிக்கை தரும் ரமழான்: தேசிய ஷூரா சபையின் ரமழான் வழிகாட்டல்கள்

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு தேசிய ஷூரா சபை முதற்கண் இலங்கை...

இலங்கை காவல்துறைக்கு 556 மில்லியன் ரூபா பெறுமதியான புதிய தொழில்நுட்ப உபகரணங்கள்!

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவினால் 556 மில்லியன் ரூபா மதிப்புள்ள...