எங்களுக்குத் தேவையற்ற கூடுதல் பாலின அடையாளங்கள் தேவையில்லை. ஹங்கேரி பிரதமர்.

Date:

பாலின அடையாளம் மற்றும் பாரம்பரிய குடும்ப விழுமியங்கள் குறித்த விவாதத்தில், ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பன் வெளியிட்டுள்ள அதிரடி அறிக்கை சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய பிரதமர் விக்டர் அர்பன், மேற்கத்திய நாடுகளின் நவீன பாலினக் கொள்கைகளை (Gender Ideology) கடுமையாக விமர்சித்தார். அவர் பேசுகையில்:

“தாய் என்பவர் ஒரு பெண்; தந்தை என்பவர் ஒரு ஆண். இதுவே இயற்கையின் விதி. எங்கள் நாட்டு குழந்தைகளை நிம்மதியாக விடுங்கள். எங்களுக்குத் தேவையற்ற கூடுதல் பாலின அடையாளங்கள் தேவையில்லை.”என்று ஆணித்தரமாகத் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பல நாடுகள் LGBTQ+உரிமைகள் மற்றும் பள்ளிகளில் பாலினக் கல்விக்கு ஆதரவாகச் செயல்பட்டு வரும் நிலையில், ஹங்கேரி அதற்கு நேர்மாறான பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளது.

குழந்தைகள் பாதுகாப்பு: குழந்தைகளை “பாலின திணிப்புகளில்” இருந்து பாதுகாக்கப் போவதாகக் கூறும் ஹங்கேரி அரசு, இதற்காகப் புதிய சட்டங்களையும் திருத்தங்களையும் கொண்டு வந்துள்ளது.

தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் விக்டர் ஓர்பன், “தேசிய கலாச்சாரம் மற்றும் குடும்ப அமைப்பைப் பாதுகாப்பதே எங்களின் முதல் கடமை” எனத் தொடர்ந்து முழங்கி வருகிறார்.

Popular

More like this
Related

ஷானி அபேசேகர பிரதிப் பொலிஸ் மா அதிபராக (DIG) தரமுயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி...

புத்தளத்தில் ‘அத்தம’ தூய்மை வேலைத்திட்டம் ஆரம்பம்: அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு!

பண்டைய இலங்கையில் நிலவிய பரஸ்பர உதவி மற்றும் கூட்டுப் பொறுப்பை அடிப்படையாகக்...

இலங்கை ஜமாஅதே இஸ்லாமி தலைமையகத்திற்கு பங்களாதேஷ் IIUC பல்கலைக்கழக பிரதிநிதிகள் வருகை!

பங்களாதேஷின் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் (IIUC) பொருளாளர் பேராசிரியர் கலாநிதி மஹ்பூபுர்...