தபால் கட்டணத் திருத்தம் இன்று முதல் நடைமுறைக்கு!

Date:

தபால் கட்டணத் திருத்தம் இன்று (09) முதல் நடைமுறைக்கு வருகிறது.

பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்தக் கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் அறிவித்துள்ளது. புதிய திருத்தங்களின் விபரங்கள் வருமாறு:

  • சாதாரண கடிதம்: அதன் கட்டணம் 50 ரூபாவிலிருந்து 70 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

  • பதிவுத் தபால்: 60 ரூபாவாக இருந்த பதிவுத் தபால் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

  • நிறை வரம்பு: சாதாரண மற்றும் வணிகக் கடிதச் சேவையின் அடிப்படை நிறை வரம்பு 20 கிராமிலிருந்து 30 கிராம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

  • துண்டுப்பிரசுரங்கள்: ஒரு துண்டுப்பிரசுரம் அல்லது அதன் தொகுப்பின் அதிகபட்ச நிறை 100 கிராமிலிருந்து 120 கிராம் வரை திருத்தப்பட்டுள்ளது.

  • தொண்டு நிறுவனங்கள்: தொண்டு நிறுவனங்கள், சமூக சேவை மற்றும் தன்னார்வ நிறுவனங்களின் கடிதங்களுக்கான கட்டணம் 30 ரூபாவிலிருந்து 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

  • அரசுத் திணைக்களங்கள்: அமைச்சுகள் மற்றும் அரசுத் திணைக்களங்களுக்கான விசேட பதிவுத் தபால் கட்டணம் 110 ரூபாவிலிருந்து 130 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

  • தபால் அட்டை (Postcard): இதன் கட்டணம் 20 ரூபாவிலிருந்து 40 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா போஸ்ட் கூரியர் (Sri Lanka Post Courier) சேவைக்கான கட்டணங்களில் மாற்றம் செய்யப்படவில்லை என தபால் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இவற்றுடன் தபால் அட்டை உறை சேவை, டெலிமெயில் சேவை, முத்திரை உறைகள், தபால் பை (Postal Bag) சேவை மற்றும் கட்டணம் செலுத்தப்படாத அல்லது குறைவான கட்டணம் செலுத்தப்பட்ட தபால் பொருட்களுக்கான குறைந்தபட்ச மேலதிக கட்டணங்களும் திருத்தப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

பெரும்பான்மையை ஏற்றுக் கொண்டார் ஆளுநர்: த.வெ.க. தலைவர் விஜய் நாளை தமிழக முதல்வராக பதவியேற்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல்....

ஐயூஎம்எல் ஆதரவு: தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!

தவெக ஆட்சியமைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு...

அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 லட்சத்திற்கும் அதிக சுற்றுலாப் பயணிகள்...

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் நிறைவு

இலங்கைக்கான அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த வியட்நாம் சோசலிசக் குடியரசின்...