தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் சுங்க அதிகாரிகள்!

Date:

6 வருடங்களாக தாமதமாகிவரும் சுங்க அதிகாரிகளின் பதவி உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, சுங்க அதிகாரிகள் கூட்டணி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

பலமுறை தங்கள் பிரச்சினைகள் குறித்து தெரிவிக்கப்பட்ட போதிலும் முறையான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று சுங்க அதிகாரிகள் கூட்டணி தெரிவித்துள்ளது.

எனவே, இன்று (24) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சுங்க அலுவலகங்களிலும் சுங்க அதிகாரிகள் கறுப்பு நிற ஆடை அணிந்து உத்தியோகபூர்வ நடவடிக்கைகளில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

இருப்பினும் 26ஆம் திகதி நிதி அமைச்சகம் மற்றும் பொதுச் சேவை ஆணைக்குழு உட்பட பல தரப்பினருடன் சிறப்பு கலந்துரையாடல் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலந்துரையாடலின் இறுதியில் சுங்க தொழிற்சங்க கூட்டணியின் பிரதிநிதிகள் அடுத்த வெள்ளிக்கிழமை கூடி தங்கள் தொழிற்சங்க நடவடிக்கை குறித்து மேலும் முடிவுகளை எடுப்பார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

மார்ச் 01 முதல் நாடளாவிய “போதைப்பொருள் ஒழிப்பு வாரம்” நடைமுறை

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய நடவடிக்கைத் திட்டத்திற்கு இணையாக “போதைப்பொருள் ஒழிப்பு...

துபாயில் இடம்பெற்ற ‘சட்ட சபையில் சமூக நீதி குரல்’ நூல் வெளியீட்டு விழாவும் இப்தார் நிகழ்வும் முக்கிய விருதுகளும் வழங்கி வைப்பு.

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தமிழ்நாடு தமிமுன்...

வரி விதிப்பு: உலக நாடுகளுக்கு டிரம்ப் மிரட்டல்

எந்த நாடாவது வரி விதிப்பு விவகாரத்தில் விளையாட நினைத்தால், அந்த நாடுகளின்...

இங்கிலாந்து கிரிக்கெட் சபைத் தலைவர் இலங்கைக்கு விஜயம்

இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் தலைவர் ரிச்சர்ட் வில்லியம் தோம்சன் (Richard William...