பங்களாதேஷ் புதிய பிரதமராகப் பதவியேற்றார் தாரிக் ரஹ்மான்!

Date:

பங்களாதேஷ் நாட்டின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் பதவியேற்றுக் கொண்டார்.

பங்களாதேஷில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில், மொத்தமுள்ள 297 இடங்களில் 209-ல் இடங்களில் மறைந்த முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பங்களாதேஷ் தேசியவாத கட்சி (பிஎன்பி) வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, வங்கதேச தேசியவாத கட்சியின் நாடாளுமன்றத் தலைவராக தாரிக் ரஹ்மான் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் செவ்வாய்க்கிழமை காலை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையடுத்து, தாரிக் ரஹ்மான் தலைமையிலான 25 அமைச்சர்கள் மற்றும் 24 இணையமைச்சர்கள் கொண்ட அமைச்சரவைக் குழு அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், நாடாளுமன்றக் கட்டடமான ஜதிய சங்கசத் பவனில் இன்று மாலை நடைபெற்ற விழாவில் தாரிக் ரஹ்மான் பங்களாதேஷின் புதிய பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார். அந்நாட்டின் அதிபர் முகமது சகாபுதீன் தாரிக் ரஹ்மானுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மேலும், தாரிக் ரஹ்மானின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா சார்பில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

இத்துடன், அவாமி லீக் கட்சியின் ஷேக் ஹசீனா மற்றும் பிஎன்பி கட்சியின் கலீதா ஜியா ஆகியோர் மட்டுமே பிரதமராகப் பதவி வகித்து வந்த நிலையில், 35 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக வங்கதேசத்துக்கு ஆண் ஒருவர் பிரதமராகப் பதவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில்

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...

விசேட தேவையுடையோருக்கென பிரத்தியேக பஸ் சேவை

வேலைத்திட்டத்தின் கீழ் விசேட தேவையுடைவர்களுக்கான முன்னுரிமை அடிப்படையிலான பஸ் சேவைக்கான பஸ்கள்...

இலங்கையின் சனத்தொகை மாற்றம்: காலநிலை மாற்றம் மற்றும் கொள்கை குறைபாடுகளால் ஏற்படும் சமூக-பொருளாதார நெருக்கடிகள்

இலங்கை ஒரு விரைவான சனத்தொகை மாற்றத்தை எதிர்கொண்டு வருகின்றது. தற்போது நாட்டின்...

இலங்கையின் புதிய இராஜதந்திரிகள் தூதுவர்களின் நியமனங்களுக்கு நாடாளுமன்றம் அனுமதி

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் பிரதானிகளாக நியமிக்கப்படுவதற்காக, அண்மையில் ஜனாதிபதி அநுர...