விபச்சாரத்துக்கு தூண்டுதலாக அமையும் ஸ்பா (Spa) நிலையங்களை மூடுவதற்கு புத்தளம் மாநகர சபை தீர்மானம்

Date:

புத்தளம் மாநகர சபையின் நேற்றைய (24) அமர்வின்போது, மக்கள் நலனை முன்னிறுத்தி பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

குறிப்பாக, மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ‘ஸ்பா’ (Spa) என்ற பெயரில் இயங்கி வரும், விபச்சார நடவடிக்கைகளுக்குத் தூண்டுதலாக அமையும் நிறுவனங்களுக்கான அனுமதியை நிறுத்துவதற்கு சபை தீர்மானித்துள்ளது.

பிரதேசத்தில் அதிகரித்து வரும் இத்தகைய சட்டவிரோத செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்ட இந்த முடிவு வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

அத்துடன், எதிர்வரும் பெருநாள் சந்தையைத் திட்டமிட்ட முறையில் விரிவாக்கம் செய்வது, கொழும்பு முகத்திடல் கடற்கரைப்பகுதியை அபிவிருத்தி செய்வது மற்றும் மாநகர சபை ஊழியர்களுக்கான முறையான குடியிருப்புத் திட்டத்தை முன்னெடுப்பது உள்ளிட்ட தீர்மானங்களும் இக்கூட்டத்தின்போது மேற்கொள்ளப்பட்டதாக மாநகர சபை உறுப்பினர் இப்லால் அமீன் தெரிவித்துள்ளார்.

(Facebook)

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...