இராணுவம் மற்றும் பொலிஸார் மீது நன்மதிப்பு: டிட்வா நிவாரணம் குறித்தான மக்களின் கருத்துக்கணிப்பு

Date:

சமூக விஞ்ஞானிகளின் சங்கத்தினால் (SSA) கடந்த டிட்வா புயலின் பின்னர் இடம்பெற்ற நிவாரணப் பணிகள் தொடர்பில் ஆய்வொன்று நடத்தப்பட்டுள்ளது. மக்களின் கருத்துக்கணிப்பு இதற்கென பெறப்பட்டது.

இதற்கமைய அரசு குறித்த அனர்த்த நிலைமைகளை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகளை 74.4 வீதமானோர் வரவேற்றுள்ளனர். நிவாரண திட்டங்களில் ஜனாதிபதியின் தலையீடு குறித்தான கருத்துக்கணிப்பில் 78.7 வீதமான மக்களின் வரவேற்பு கிடைக்கப்பெற்றுள்ளது.

இதேவேளை முப்படையினர் மற்றும் பொலிசாரின் நிவாரணப் பணிகள் விடயத்தில் இராணுவத்தினருக்கு 91.2 வீதமானோரும் பொலிசாருக்கு 84.6 வீதமானோரும் தமது வரவேற்பை வழங்கியுள்ளனர்.

அரசியல்வாதிகளின் செயற்பாடுகளுடன் ஒப்பிடுகையில் ஆளும்கட்சி அரசியல்வாதிகளின் பணிகளுக்கு 45.8 வீதமானோர் தமது பாராட்டை வழங்கியுள்ளனர். எதிர்க்கட்சியின் செயற்பாடுகளுக்கு 23.7 வீதமானோரே தமது வரவேற்பை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் விழாக்களை எளிமையான நடத்துங்கள்: கல்வி அமைச்சு

பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் பல்வேறு விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களுக்கு முன்னைய அறிவுறுத்தல்களைப் புறக்கணித்து...

கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் பாகிஸ்தான் இஸ்லாமிய பல்கலைக்கழகம் இடையே புதிய கல்விசார் ஒத்துழைப்பு

சர்வதேச ரீதியிலான கல்வித் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்கில், கொழும்பு பல்கலைக்கழகம்...

விடுமுறை காலச் சுற்றுலாக்களின் போது முஸ்லிம் சமூகம் பேண வேண்டிய ஒழுக்கக்கோவைகள்: உலமா சபை விசேட வழிகாட்டல்கள்

விடுமுறை காலங் களில் மேற்கொள்ளப் படும் சுற்றுலாக்கள் மற்றும் பயணங்களின் போது...

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு 700 மில்லியன் டொலர்கள் நிதியுதவி!

நான்காண்டு கால நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் கீழ், ஐந்தாவது...