பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருடன் இலங்கை தேசிய ஐக்கியத்திற்கான சர்வமத கூட்டமைப்பு சந்திப்பு

Date:

இலங்கை தேசிய ஐக்கியத்திற்கான சர்வமத கூட்டமைப்பின் (National Interfaith Clergy Fellowship of Sri Lanka) சர்வமதத் தலைவர்கள் குழுவினர், இன்று (02) இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) பஹீம்-உல்-அசீஸ் (Faheem-ul-Aziz) அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

நாட்டின் முக்கிய மதங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலாநிதி சாஸ்திரபதி காலகம தம்மரான்சி நாயக்க தேரோ (பௌத்த விவகாரங்கள்) அல்-ஹாஜ் அஷ்-செய்யத் கலாநிதி ஹசன் மௌலானா அல்-காதிரி (முஸ்லிம் விவகாரங்கள்) அருட்தந்தை கலாநிதி நிஷான் சம்பத் குரே (கிறிஸ்தவ விவகாரங்கள்) சிவஸ்ரீ பாபு சர்மா குருக்கள் (இந்து விவகாரங்கள்) ஆகியோர் கலந்துகொண்டனர்.

கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், பிராந்திய அமைதி, மதங்களுக்கிடையிலான நல்லிணக்கம் மற்றும் இலங்கை – பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான நீண்டகால இராஜதந்திர நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

மத நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதில் மதத் தலைவர்களின் பங்களிப்பை உயர்ஸ்தானிகர் இதன்போது பாராட்டினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சார மற்றும் சமூக உறவுகளை மேம்படுத்த தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவதாக பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் உறுதி அளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...

சிறுவர்களுக்கான அன்றாட துஆக்கள் மற்றும் ஒழுக்கங்கள்: மும்மொழிகளில் புதிய நூல் வெளியீடு!

பிள்ளைகள் அன்றாட வாழ்வில் ஓத வேண்டிய துஆக்கள் மற்றும் அவர்கள் கடைப்பிடிக்க...

இந்தியப் பெருங்கடலில் பாகிஸ்தான் கடற்படையின் அதிரடி மீட்பு நடவடிக்கை: இலங்கை பிரஜை மீட்பு.

மனிதாபிமான அடிப்படையிலும், கடலில் ஆபத்தில் இருப்பவர்களைக் காக்கும் கடமையுணர்வோடும் பாகிஸ்தான் கடற்படை...

6 ஆம் தரத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட எந்தவொரு பாடத்தொகுதிகளும் நீக்கப்படவில்லை: பிரதமர்

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் 6 ஆம் தரத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட எந்தவொரு...