பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருடன் இலங்கை தேசிய ஐக்கியத்திற்கான சர்வமத கூட்டமைப்பு சந்திப்பு

Date:

இலங்கை தேசிய ஐக்கியத்திற்கான சர்வமத கூட்டமைப்பின் (National Interfaith Clergy Fellowship of Sri Lanka) சர்வமதத் தலைவர்கள் குழுவினர், இன்று (02) இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) பஹீம்-உல்-அசீஸ் (Faheem-ul-Aziz) அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

நாட்டின் முக்கிய மதங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலாநிதி சாஸ்திரபதி காலகம தம்மரான்சி நாயக்க தேரோ (பௌத்த விவகாரங்கள்) அல்-ஹாஜ் அஷ்-செய்யத் கலாநிதி ஹசன் மௌலானா அல்-காதிரி (முஸ்லிம் விவகாரங்கள்) அருட்தந்தை கலாநிதி நிஷான் சம்பத் குரே (கிறிஸ்தவ விவகாரங்கள்) சிவஸ்ரீ பாபு சர்மா குருக்கள் (இந்து விவகாரங்கள்) ஆகியோர் கலந்துகொண்டனர்.

கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், பிராந்திய அமைதி, மதங்களுக்கிடையிலான நல்லிணக்கம் மற்றும் இலங்கை – பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான நீண்டகால இராஜதந்திர நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

மத நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதில் மதத் தலைவர்களின் பங்களிப்பை உயர்ஸ்தானிகர் இதன்போது பாராட்டினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சார மற்றும் சமூக உறவுகளை மேம்படுத்த தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவதாக பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் உறுதி அளித்தார்.

Popular

More like this
Related

தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கோரிக்கை!

நீர்ப்பாசனத் துறை இயக்குநர், நீர் மேலாண்மைப் பொறியாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹெரத், தனது...

HIV மற்றும் பாலியல் சார் நோய்களைக் கண்டறிய விசேட ‘நடமாடும் முகாம்கள்’!

எச்.ஐ.வி, கல்லீரல் அழற்சி (Hepatitis) மற்றும் பாலியல் சார் நோய்களை முன்கூட்டியே...

ஜூலை 13: கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையை விட்டு வெளியேறி நான்கு ஆண்டுகள் – ஒரு பார்வை

இலங்கையின் மிகவும் சக்திவாய்ந்த நிறைவேற்று ஜனாதிபதிகளில் ஒருவரான  கோட்டாபய ராஜபக்ஷவை 2022,...

முன்பள்ளி செல்லும் சிறுவர்களுக்கு பாதுகாப்பான ஆடைகளை அணிவிக்குமாறு வேண்டுகோள்!

டெங்கு அச்சுறுத்தல் நிலவும் சூழலில், டெங்கு நுளம்புகளிடமிருந்து பாதுகாப்பதற்காக, தங்கள் கைகளையும்...