காலி குற்றவியல் பிரிவில் ஒப்படைக்கப்பட்ட ‘பொடி லெஸி’

Date:

இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட ‘பொடி லெஸி’ காலி குற்றவியல் பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் இந்தியாவிற்கு தப்பிச் சென்ற குறித்த சந்தேகபர் அந்நாட்டிலிருந்து இன்று (27) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் பிரபல பாதாளக் குழு உறுப்பினரும் சர்வதேச ரீதியிலான போதைப்பொருள் கடத்தல்காரரும், பல்வேறு கொலைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த குற்றவாளியுமான ‘பொடி லெஸி’ என அழைக்கப்படும் ஆருமாஹந்தி ஜனித் மதுசங்க இந்தியாவிலிருந்து இன்று (27) அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட அவரை, இந்தியா சென்ற விசேட பொலிஸ் குழுவினரால், இன்று (27) அதிகாலை 5.55 மணிக்கு மும்பையில் இருந்து வந்த ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 142 இலக்க விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் சந்தேகநபருமான ‘பொடி லெஸி’ எனப்படும் ஜனித் மதுசங்க, 2024 டிசம்பர் 09ஆம் திகதி நீதிமன்றத்தில் பிணை வழங்கப்பட்டதன் பின்னர் தலைமறைவாகியிருந்த நிலையில் கடல் வழியாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

‘டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிவாரணம்!

கடந்த ஆண்டின் இறுதியில் நாட்டைத் தாக்கிய ‘திட்வா’ (Ditwa) சூறாவளியினால் பாதிக்கப்பட்ட...

நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும்

நாட்டில் இன்று (27) பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும் என...

பெப்ரவரி மாதத்திற்கான ‘அஸ்வெசும’ முதியோர் கொடுப்பனவு வங்கிக் கணக்குகளில்!

பெப்ரவரி மாதத்திற்கான ‘அஸ்வெசும’ முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழான முதியோர்...

பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்; ‘தார்மீக கோழைத்தனம்’ என காங்கிரஸ் விமர்சனம்

இஸ்ரேலுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கையை இந்தியாவின் எதிர்க்கட்சிகள்...