காசா பகுதியில் நிலவும் மனிதாபிமான நெருக்கடியைத் தணிக்க ரஃபா (Rafah) எல்லைக் கடப்பு திறக்கப்பட்டது ஒரு நேர்மறையான நடவடிக்கை என்று கத்தார் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
“ரஃபா எல்லை திறக்கப்பட்டிருப்பது, பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகளை வழங்க ஒரு முக்கிய தொடக்கமாகும். இதன் மூலம் அங்குள்ள மக்களின் துயரங்கள் ஓரளவு குறையும் என எதிர்பார்க்கிறோம். காசாவில் தற்போதுள்ள போர் நிறுத்தம் எவ்வித தடையுமின்றி தொடர்ந்து நிலைநாட்டப்பட வேண்டும். இது பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த மிகவும் அவசியமானது.
பொதுமக்களுக்குத் தேவையான உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய மனிதாபிமான உதவிகள் எவ்வித குறுக்கீடும் இன்றி அவர்களைச் சென்றடைவதை அனைத்துத் தரப்பினரும் உறுதி செய்ய வேண்டும்.”
பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்கும், மனிதாபிமான உதவிகளுக்கும் கத்தார் அரசு தொடர்ந்து தனது ஆதரவை வழங்கும் என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
