மார்ச் 01 முதல் போதைப்பொருள் ஒழிப்பு வாரம்!

Date:

2026 மார்ச் 01 ஆம் திகதி ஆரம்பமாகும் வாரத்தை “போதைப்பொருள் ஒழிப்பு வாரம்” எனப் பிரகடனப்படுத்துவதற்கு, போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான “நாடே ஒன்றிணைவோம்” தேசிய செயற்பாட்டு சபை தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான 07/2026 இலக்க அரச நிர்வாகச் சுற்றறிக்கை, அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

போதைப்பொருள் விற்பனையைக் கட்டுப்படுத்தி ஒடுக்குதல் மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு அடிமையானவர்களை மீட்டு புனர்வாழ்விற்கு உட்படுத்துதல் ஆகிய இரண்டு அடிப்படை நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகத் தேவையான மக்கள் விழிப்புணர்வையும், மேம்பட்ட சமூக உரையாடலையும் உருவாக்குவதற்காக இந்த வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, இந்த வாரத்தில் அரச நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் அடிமட்ட அளவில் பரந்த அளவிலான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அரச அமைச்சுகள் உள்ளிட்ட அனைத்து இணைந்த நிறுவனங்களின் அதிகாரிகளின் பங்களிப்புடன் பல திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகப் பன்முகப்படுத்தப்பட்ட புதிய திட்டங்களைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகள், முச்சக்கர வண்டிகள் மற்றும் பாடசாலை போக்குவரத்து வாகனங்களை மையமாகக் கொண்டு பல்வேறு பிரச்சார நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்காகத் தொடர்புடைய அரச நிறுவனங்கள் ஊடாகத் தேவையான சட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட ஏனைய தலையீடுகளைத் தடையின்றி முன்னெடுக்கும் அதேவேளை, இந்தத் தேசியத் திட்டத்தை வெற்றிகொள்வதற்கு அத்தியாவசியக் காரணியான பரந்த சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இனைத்துத் திட்டங்களினதும் எதிர்பார்ப்பாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

காலி குற்றவியல் பிரிவில் ஒப்படைக்கப்பட்ட ‘பொடி லெஸி’

இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட ‘பொடி லெஸி’ காலி குற்றவியல் பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். பிணையில்...

‘டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிவாரணம்!

கடந்த ஆண்டின் இறுதியில் நாட்டைத் தாக்கிய ‘திட்வா’ (Ditwa) சூறாவளியினால் பாதிக்கப்பட்ட...

நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும்

நாட்டில் இன்று (27) பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும் என...

பெப்ரவரி மாதத்திற்கான ‘அஸ்வெசும’ முதியோர் கொடுப்பனவு வங்கிக் கணக்குகளில்!

பெப்ரவரி மாதத்திற்கான ‘அஸ்வெசும’ முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழான முதியோர்...