முஸ்லிம்களின் மூன்றாவது புனிதஸ்தலமான அல்-அக்ஸா பள்ளிவாசலில் இடம்பெற்ற முதல் தராவிஹ் தொழுகை.

Date:

முஸ்லிம்களின் மூன்றாவது புனிதத் தலமாகக் கருதப்படும் பலஸ்தீனத்தின் அல்-அக்ஸா பள்ளிவாசலில், ரமழான் மாதத்தின் முதல் தராவிஹ் தொழுகை நேற்று இரவு மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நடைபெற்றது.

2026 ஆம் ஆண்டு ரமழான் மாதத்தின் முதல் பிறை தென்பட்டதைத் தொடர்ந்து,  ஜெருசலேமில் முதல் தராவிஹ் தொழுகை தொடங்கியது.

இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் பழைய நகரம் மற்றும் பள்ளிவாசலின் நுழைவாயில்களில் கடுமையான சோதனைகளை மேற்கொண்டனர். குறிப்பாக, இளைஞர்கள் உள்ளே நுழைய பல இடங்களில் தடை விதிக்கப்பட்டது.

அச்சுறுத்தல்கள் மற்றும் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் மசூதி வளாகத்திலும் அதன் திறந்தவெளி முற்றங்களிலும் திரண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து சுமார் 250-க்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்களுக்கு அல்-அக்ஸா பள்ளிவாலுசலுக்குள் நுழைய இஸ்ரேலிய அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

Popular

More like this
Related

இஸ்ரேலில் உணவகம் (Restaurant) மற்றும் கட்டிடப் புனரமைப்பு (Renovation) ஆகிய துறைகளுக்கான...

பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கி இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

வளைகுடாப் பிராந்தியத்தில் போர்ச் சூழலும் பதற்றமும் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான்,...

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு: நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்!

மேல்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையில்...

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை!

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்குப் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை...