விபச்சாரத்துக்கு தூண்டுதலாக அமையும் ஸ்பா (Spa) நிலையங்களை மூடுவதற்கு புத்தளம் மாநகர சபை தீர்மானம்

Date:

புத்தளம் மாநகர சபையின் நேற்றைய (24) அமர்வின்போது, மக்கள் நலனை முன்னிறுத்தி பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

குறிப்பாக, மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ‘ஸ்பா’ (Spa) என்ற பெயரில் இயங்கி வரும், விபச்சார நடவடிக்கைகளுக்குத் தூண்டுதலாக அமையும் நிறுவனங்களுக்கான அனுமதியை நிறுத்துவதற்கு சபை தீர்மானித்துள்ளது.

பிரதேசத்தில் அதிகரித்து வரும் இத்தகைய சட்டவிரோத செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்ட இந்த முடிவு வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

அத்துடன், எதிர்வரும் பெருநாள் சந்தையைத் திட்டமிட்ட முறையில் விரிவாக்கம் செய்வது, கொழும்பு முகத்திடல் கடற்கரைப்பகுதியை அபிவிருத்தி செய்வது மற்றும் மாநகர சபை ஊழியர்களுக்கான முறையான குடியிருப்புத் திட்டத்தை முன்னெடுப்பது உள்ளிட்ட தீர்மானங்களும் இக்கூட்டத்தின்போது மேற்கொள்ளப்பட்டதாக மாநகர சபை உறுப்பினர் இப்லால் அமீன் தெரிவித்துள்ளார்.

(Facebook)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

புதிய 3 நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் கையளிப்பு

நாட்டிற்கு புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று தூதுவர்கள் நேற்று (24) முற்பகல் ஜனாதிபதி...

எவன்கார்ட் நிறுவனத்தின் மனுக்கள் விசாரணை இன்றி தள்ளுபடி

எவன்கார்ட் நிறுவனம் நடத்தி வந்த மூன்று ஆயுதக் களஞ்சியங்களை அகற்றுமாறு பாதுகாப்பு...

உயிர்த்த ஞாயிறு வழக்கு: அரச புலனாய்வுத்துறையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே கைது!

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...