பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவினால் 556 மில்லியன் ரூபா மதிப்புள்ள அத்தியாவசிய தொழில்நுட்ப உபகரணங்கள் பொலிஸ் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டன.
பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம் உபகரணங்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.
இதற்கமைய, 365 மில்லியன் ரூபா பெறுமதியான 1,718 கணினிகள், 129 மில்லியன் ரூபா பெறுமதியுள்ள 575 புகைப்பட நகல் எந்திரங்கள், 45 மில்லியன் ரூபா பெறுமதியான வேகமானிகள் மற்றும் 17 மில்லியன் ரூபா மதிப்புள்ள 1,750 யுபிஎஸ்கள் இதில் உள்ளடங்குகின்றன.
