இராணுவம் மற்றும் பொலிஸார் மீது நன்மதிப்பு: டிட்வா நிவாரணம் குறித்தான மக்களின் கருத்துக்கணிப்பு

Date:

சமூக விஞ்ஞானிகளின் சங்கத்தினால் (SSA) கடந்த டிட்வா புயலின் பின்னர் இடம்பெற்ற நிவாரணப் பணிகள் தொடர்பில் ஆய்வொன்று நடத்தப்பட்டுள்ளது. மக்களின் கருத்துக்கணிப்பு இதற்கென பெறப்பட்டது.

இதற்கமைய அரசு குறித்த அனர்த்த நிலைமைகளை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகளை 74.4 வீதமானோர் வரவேற்றுள்ளனர். நிவாரண திட்டங்களில் ஜனாதிபதியின் தலையீடு குறித்தான கருத்துக்கணிப்பில் 78.7 வீதமான மக்களின் வரவேற்பு கிடைக்கப்பெற்றுள்ளது.

இதேவேளை முப்படையினர் மற்றும் பொலிசாரின் நிவாரணப் பணிகள் விடயத்தில் இராணுவத்தினருக்கு 91.2 வீதமானோரும் பொலிசாருக்கு 84.6 வீதமானோரும் தமது வரவேற்பை வழங்கியுள்ளனர்.

அரசியல்வாதிகளின் செயற்பாடுகளுடன் ஒப்பிடுகையில் ஆளும்கட்சி அரசியல்வாதிகளின் பணிகளுக்கு 45.8 வீதமானோர் தமது பாராட்டை வழங்கியுள்ளனர். எதிர்க்கட்சியின் செயற்பாடுகளுக்கு 23.7 வீதமானோரே தமது வரவேற்பை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஹிரோஷிமா தினம்: மனித வரலாற்றின் ஆறாத வடுவும் அணுஆயுதங்களற்ற உலகத்திற்கான குரலும்

இரண்டாம் உலகப் போரின் உச்சக்கட்டம். 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி,...

பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணை விடுமுறை: கல்வி அமைச்சு!

2026 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுசரணையின் கீழ்...

கொழும்பில் சர்வதேச பட்டத் திருவிழா 2026!

கொழும்பில் எதிர்வரும் ஓகஸ்ட் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள...

இலங்கையில் காற்று மாசுபாட்டால் ஆண்டுக்கு 7,000 பேர் மரணம்!

வளிமண்டலக் காற்று மாசுபாடு காரணமாக இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 7,000 மரணங்கள்...