ஈரானுக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் அமைதி ஆர்ப்பாட்டம்

Date:

ஈரானுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கொழும்பில் இன்று  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

ஈரான் மீதான சர்வதேச அழுத்தங்கள் மற்றும் தற்போதைய அரசியல் சூழலைக் கருத்திற்கொண்டு, அந்த நாட்டுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் நோக்கில் ‘ஈரானுடன் ஒற்றுமைக்கான இயக்கம்’ (Movement for Solidarity with Iran) இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தது.

அதன்படி, இன்று 11ஆம் திகதி பிற்பகல் 2.30 மணியளவில் கொழும்பு 07, ஜாவத்தை வீதியில் அமைந்துள்ள ஈரான் தூதரகத்திற்கு முன்பாக பெருந்திரளான மக்கள் ஒன்றுகூடி தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.

இந்த நிகழ்வில் ஈரானுக்கு ஆதரவான வாசகங்கள் அடங்கிய சுலோகங்களைத் தாங்கியவாறு பலரும் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...