எப்ஸ்டீன் வழக்கு: பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர் கைது.

Date:

பிரிட்டன் மன்னர் சார்லஸின் தம்பியும், முன்னாள் இளவரசருமான ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர், இன்று  நோர்போக் நகரில் உள்ள சாண்டிரிங்ஹாம் எஸ்டேட்டில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

66-வது பிறந்தநாளை கொண்டாடும் நாளில் அவர் கைது செய்யப்பட்டுள்ளது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான பல கோடி பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் கடந்த மாதம் அமெரிக்காவில் வெளியிடப்பட்டன.

அந்த ஆவணங்களின் அடிப்படையில், ஆண்ட்ரூ மீது இரண்டு முக்கியக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையிலேயே இந்த கைது என்கிறது பிரிட்டன் ஊடக செய்திகள்.

இளவரசர் ஆண்ட்ரூ பிரிட்டனின் வர்த்தகத் தூதராக பணியாற்றியபோது (2001-2011), அரசு ரீதியான ரகசியத் தகவல்களை எப்ஸ்டீனுடன் பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது. அதோடு, எப்ஸ்டீன் மூலம் கடத்தி வரப்பட்ட ஒரு பெண்ணுடன் ஆண்ட்ரூ பாலியல் தொடர்பில் இருந்ததாகவும், இதற்காகப் பொது பதவியை தவறாக பயன்படுத்தியதாகவும் Thames Valley காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Popular

More like this
Related

பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் விழாக்களை எளிமையான நடத்துங்கள்: கல்வி அமைச்சு

பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் பல்வேறு விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களுக்கு முன்னைய அறிவுறுத்தல்களைப் புறக்கணித்து...

கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் பாகிஸ்தான் இஸ்லாமிய பல்கலைக்கழகம் இடையே புதிய கல்விசார் ஒத்துழைப்பு

சர்வதேச ரீதியிலான கல்வித் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்கில், கொழும்பு பல்கலைக்கழகம்...

விடுமுறை காலச் சுற்றுலாக்களின் போது முஸ்லிம் சமூகம் பேண வேண்டிய ஒழுக்கக்கோவைகள்: உலமா சபை விசேட வழிகாட்டல்கள்

விடுமுறை காலங் களில் மேற்கொள்ளப் படும் சுற்றுலாக்கள் மற்றும் பயணங்களின் போது...

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு 700 மில்லியன் டொலர்கள் நிதியுதவி!

நான்காண்டு கால நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் கீழ், ஐந்தாவது...