இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

Date:

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் வெப்பமான காலநிலை குறித்த ஆலோசனையை வழங்கியுள்ளது.

நாளை (மார்ச் 06) வரை இந்த எச்சரிக்கை நடைமுறையில் இருக்கும்.

மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவான ‘வெப்பச் சுட்டெண்’ (Heat Index), இந்த 5 மாவட்டங்களின் சில இடங்களில் ‘எச்சரிக்கை மட்டத்திற்கு’ (Caution level) அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 அதிக வெப்பம் காரணமாக மக்கள் நீண்ட நேரம் வெயிலில் இருக்கும்போது அல்லது உடல் உழைப்பில் ஈடுபடும்போது சோர்வை (Fatigue) உணரக்கூடும். மேலும், தொடர்ந்து இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவது தசையிழுவு அல்லது தசைப்பிடிப்பு (Heat cramps) போன்ற பாதிப்புகளுக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

அல்குர்ஆன் வசனங்களின் எழில்மிகு வடிவங்கள்:தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அல்-குர்ஆனிய அறிவியல் அரபு எழுத்தணி போட்டி மற்றும் கண்காட்சி!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின்...

காசாவில் இஸ்ரேலின் தீவிர வான் தாக்குதல்: ஹமாஸ் ஆயுதப்பிரிவு தளபதி இஸ் அல்-தின் அல்-ஹத்தாத் குறிவைப்பு!

மேற்கு காசா நகரிலுள்ள ரிமால் பகுதியில் இஸ்ரேல் நடத்திய அடுத்தடுத்த வான்வழித்...

78 ஆண்டுகால நக்பா பேரவலம்: பூர்வீக நிலத்திற்காக ஏங்கும் பாலஸ்தீனர்கள்!

மே 15, பாலஸ்தீன வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒரு கருப்பு...

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரியில் மாற்றம்

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி தீர்வை வரி...