இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்களுக்கான அறிவிப்பு

Date:

விடுமுறை மற்றும் ஏனைய விடயங்களுக்காக இஸ்ரேலில் இருந்து வெளியேறியுள்ள இலங்கை தொழிலாளர்களின் விசா காலம் 2026 ஏப்ரல் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

இதன்படி, 2026 பெப்ரவரி 28 முதல் ஏப்ரல் 21 வரையான காலப்பகுதிக்குள் காலாவதியான அல்லது காலாவதியாகவுள்ள மீள்-பிரவேச விசாக்கள் (Re-entry Visa) தானாகவே ஏப்ரல் 30 வரை நீடிக்கப்படும். இதற்காக தனியாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விசா நீடிப்பு தொடர்பான விபரங்கள் இஸ்ரேலிய குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரசபையின் முறைமையில் (System) புதுப்பிக்கப்படும் என்பதுடன், அந்த காலப்பகுதிக்குள் எல்லைகள் ஊடாக மீண்டும் இஸ்ரேலுக்குள் நுழைய அனுமதி வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

அல்குர்ஆன் வசனங்களின் எழில்மிகு வடிவங்கள்:தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அல்-குர்ஆனிய அறிவியல் அரபு எழுத்தணி போட்டி மற்றும் கண்காட்சி!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின்...

காசாவில் இஸ்ரேலின் தீவிர வான் தாக்குதல்: ஹமாஸ் ஆயுதப்பிரிவு தளபதி இஸ் அல்-தின் அல்-ஹத்தாத் குறிவைப்பு!

மேற்கு காசா நகரிலுள்ள ரிமால் பகுதியில் இஸ்ரேல் நடத்திய அடுத்தடுத்த வான்வழித்...

78 ஆண்டுகால நக்பா பேரவலம்: பூர்வீக நிலத்திற்காக ஏங்கும் பாலஸ்தீனர்கள்!

மே 15, பாலஸ்தீன வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒரு கருப்பு...

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரியில் மாற்றம்

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி தீர்வை வரி...