ஊடகத்துறை வளர்சிக்காக சுயாதீன ஊடக ஆணைக்குழு அமைக்க நடவடிக்கை

Date:

இலங்கைப் பத்திரிகைப் பேரவைக்கு பதிலாக சுயாதீன ஊடக ஆணைக்குழுவொன்றை அமைக்கும் யோசனைக்கு கருத்திட்டப் பத்திரமொன்றை ஊடக அமைச்சின் ஏற்பாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது.

விஷேட நிபுணர் குழுவொன்றினால் தயாரிக்கப்பட்ட இக்கருத்திட்டப் பத்திரத்தை இலங்கைப் பத்திரிகைப் பேரவையின் தலைவர் பிரியான் ஆர்.விஜயபண்டார ஊடக துறைப் பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்னாவுக்கு ஊடக அமைச்சின் கேட்போர் கட்டத்தில் கையளித்தார்.

சிரேஷ்ட ஊடகவியளார்கள், நிருவாகத்துறை உயரதிகரிகள், வெகுஜனத் தொடர்பு மற்றும் ஊடகத்துறைசார் வல்லுனர்கள், சட்ட அறிஞர்கள் துறை சார்ந்த பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகள் அடங்கிய  குழுவினரால் இக்கருத்திட்டப் பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது –

இவ்வைபவத்தின் போது கருத்துத் தெரிவித்த ஊடகத்துறைப் பிரதி அமைச்சர் கலாநிதி ஆரியரத்ன. இலங்கைப் பத்திரிகைப் பேரவை களைக்கப்பட இருப்பதுடன் அதற்குப் பதிலாக பல்வேறு தரப்புகளின் கருத்துக்கள் பெறப்பட்டு சுயாதீன ஊடக ஆணைக் குழு அமைப்பதுடன் அது குறிப்பிட்ட காலப் பகுதிக்குள் விரைவாகவும் அமைப்பது அவசியமாகும் எனத் தெரிவித்தார்.

சுதந்திர ஊடக அமைப்பும் இதற்கான இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக பொதுமக்களின் கருத்துக் கணிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

(ஹில்மி முஹம்மது)

Popular

More like this
Related

புத்தாண்டு என்பது பண்டிகை மட்டுமல்ல, எமது கலாசார விழுமியங்களில் பொதிந்துள்ள சுபீட்சம், ஒற்றுமை, சகவாழ்வு: பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!

சூரியன் மீன இராசியிலிருந்து மேஷ இராசிக்குச் சங்கமிப்பதையும், அறுவடைப் பணிகள் நிறைவடைந்து...

கூட்டுச் செயல்பாடுகள் மூலம் வெளிப்படும் சமூக-கலாசார பிணைப்புடன் இந்த புத்தாண்டு அமைய நல்வாழ்த்துகள்: ஜனாதிபதியின் புத்தாண்டு செய்தி

பௌதீக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் மாற்றம் பெறுவதை அடையாளப்படுத்தும் சிங்கள மற்றும்...

அமைதிப்பேச்சு: பாகிஸ்தான் சென்றார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்: பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு.

ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள பாகிஸ்தான் வந்த அமெரிக்க துணை...

வாகனங்களுக்கான எரிபொருள் QR முறைமை நீக்கம்?

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, இன்று (11) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி...