மாணவர்களை பாடசாலையில் சேர்ப்பது குறித்து புதிய சுற்றுநிரூபமொன்று வெளியிடப்பட்டுள்ளது. 5 மற்றும் 6ம் வகுப்புகளைத் தவிர்த்து 1 முதல் 11ம் தரம் வரையான வகுப்புகளில் மாணவர்களை சேர்ப்பது தொடர்பில் இந்த சுற்றுநிரூபம் செல்லுபடியாகும்.
இது தொடர்பில் கல்வியமைச்சர் என்ற அடிப்படையில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2026 வருடத்தில் நடைமுறைக்கு வந்துள்ள கல்வி மறுசீரமைப்புகளுக்கமைய வகுப்பறையொன்றில் இருக்க வேண்டிய மாணவர்களின் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையை முன்னெடுத்துச் செல்லும் வகையிலும் குறித்த தரங்களுக்கு மாணவர்களை இணைப்பது தொடர்பில் புதிய சுற்றுநிரூபம் தயாரிக்கப்பட்டுள்ளது.
