தினமும் பல மணிநேரங்களுக்கு நீர் விநியோகத்தில் தடை

Date:

நாட்டில் தற்சமயம் நிலவும் வறட்சியமான மற்றும் குறைந்த மழை வீழ்ச்சிப் பதிவு காரணமாக அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு தினமும் பல மணிநேரங்களுக்கு நீர் விநியோகத்தைக் கட்டுப்படுத்த வேண்டியிருக்கலாம் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்  சபையின்  தலைவர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார்.

அத்தகைய நீர் விநியோகத் தடைகள் இன்னும் அமுல்படுத்தப்படவில்லை என்றாலும், தற்போதைய வானிலை நிலவரத்தால் வரும் காலத்தில் 24 மணி நேரமும் தொடர்ச்சியான நீர் விநியோகத்தைப் பராமரிப்பது கடினமாகலாம் என்றும் அவர் இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கூறினார்.

அம்பத்தளை உள்ளிட்ட நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் உற்பத்தித் திறன் இதுவரை பாதிக்கப்படவில்லை என்றாலும், உயரமான பகுதிகளுக்கான நீர் விநியோகம் ஏற்கனவே குறைந்த அழுத்த நிலையில் உள்ளது.

எனவே, பொது மக்கள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய சந்தன பண்டார, குறைந்த அழுத்த நீர் விநியோகம் உள்ள பகுதிகளில் நீர் விநியோகம் தற்போது டேங்கர் லொறிகள் மூலமாக வழங்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

Popular

More like this
Related

ஹஜ் 2026: இலங்கை யாத்திரிகர்களின் நலன்களை ஆராய சவூதி சென்றடைந்தார் பிரதி அமைச்சர் முனீர் முலப்பர்!

இலங்கையின் முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் பிரதி அமைச்சரும், ஹஜ் தூதுவருமான கௌரவ...

தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகருடன் H. அப்துர் ரகீப் அவர்கள் நேரில் சந்திப்பு: இஸ்லாமிய நூல்கள் அன்பளிப்பு!

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் முன்னாள் மாநிலத் தலைவரும், தற்போதைய மத்திய...

மூளைக்காய்ச்சல் குறித்து பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

தெனியாய பகுதியில் உள்ள சில பாடசாலைகளில் பதிவாகியிருந்த மூளைக்காய்ச்சல் நோய், தற்போது...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு தன்சல் வழங்குவோருக்கான அறிவிப்பு!

எதிர்வரும் வெசாக் பௌர்ணமி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் நடத்துவதற்காக இதுவரையில்...