தினமும் பல மணிநேரங்களுக்கு நீர் விநியோகத்தில் தடை

Date:

நாட்டில் தற்சமயம் நிலவும் வறட்சியமான மற்றும் குறைந்த மழை வீழ்ச்சிப் பதிவு காரணமாக அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு தினமும் பல மணிநேரங்களுக்கு நீர் விநியோகத்தைக் கட்டுப்படுத்த வேண்டியிருக்கலாம் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்  சபையின்  தலைவர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார்.

அத்தகைய நீர் விநியோகத் தடைகள் இன்னும் அமுல்படுத்தப்படவில்லை என்றாலும், தற்போதைய வானிலை நிலவரத்தால் வரும் காலத்தில் 24 மணி நேரமும் தொடர்ச்சியான நீர் விநியோகத்தைப் பராமரிப்பது கடினமாகலாம் என்றும் அவர் இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கூறினார்.

அம்பத்தளை உள்ளிட்ட நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் உற்பத்தித் திறன் இதுவரை பாதிக்கப்படவில்லை என்றாலும், உயரமான பகுதிகளுக்கான நீர் விநியோகம் ஏற்கனவே குறைந்த அழுத்த நிலையில் உள்ளது.

எனவே, பொது மக்கள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய சந்தன பண்டார, குறைந்த அழுத்த நீர் விநியோகம் உள்ள பகுதிகளில் நீர் விநியோகம் தற்போது டேங்கர் லொறிகள் மூலமாக வழங்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

Popular

More like this
Related

அல்குர்ஆன் வசனங்களின் எழில்மிகு வடிவங்கள்:தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அல்-குர்ஆனிய அறிவியல் அரபு எழுத்தணி போட்டி மற்றும் கண்காட்சி!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின்...

காசாவில் இஸ்ரேலின் தீவிர வான் தாக்குதல்: ஹமாஸ் ஆயுதப்பிரிவு தளபதி இஸ் அல்-தின் அல்-ஹத்தாத் குறிவைப்பு!

மேற்கு காசா நகரிலுள்ள ரிமால் பகுதியில் இஸ்ரேல் நடத்திய அடுத்தடுத்த வான்வழித்...

78 ஆண்டுகால நக்பா பேரவலம்: பூர்வீக நிலத்திற்காக ஏங்கும் பாலஸ்தீனர்கள்!

மே 15, பாலஸ்தீன வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒரு கருப்பு...

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரியில் மாற்றம்

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி தீர்வை வரி...